சீனாவை சமாளிக்க தயார்! : லடாக்கில் புதிய வியூகங்கள் இந்திய ராணுவம் அதிரடி!
Jul 31, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவை சமாளிக்க தயார்! : லடாக்கில் புதிய வியூகங்கள் இந்திய ராணுவம் அதிரடி!

Murugesan M by Murugesan M
Jan 14, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இந்தியா, தனது போர் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில், லடாக்கில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயங்களில், 11 பாதுகாப்பு உள்கட்டமைப்பு திட்டங்களுக்குத் தேசிய வனவிலங்கு வாரியம் (NBWL) அனுமதி அளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சீன துருப்புகளுடனான கால்வான் மோதலுக்குப் பிறகு சீன- இந்திய எல்லை பதற்றம் அதிகரித்தது. அப்போது இருந்து, லடாக்கில் ராணுவ உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது.

நாட்டின் எல்லை பகுதி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பல்வேறு தரப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்திய ராணுவத்தால் முன்மொழியப்பட்டன.

இந்தத் திட்டங்கள் உணர்திறன் வாய்ந்த வனவிலங்குப் பகுதிகளுக்குள் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் மற்றும் வெடிமருந்து சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட ராணுவத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தரைப் படை இராணுவ முகாம்கள் மற்றும் பீரங்கி படைப்பிரிவு முகாம்கள் அமைப்பது, இராணுவ சிக்னல்கள், மொபைல் தொலைத்தொடர்பு கோபுரங்கள் நிறுவுவது, படகு கொட்டகை பகுதிகள் அமைப்பது, வெடிமருந்து சேமிப்பு வசதிகளை உருவாக்குவது மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு முகாம்கள் அமைப்பது ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.

சுற்றுச்சூழல் தாக்கங்களைச் சமாளிக்க ஹான்லே கிராமத்தில் கழிவுகளை அகற்றும் மற்றும் பதப்படுத்தும் ஆலையை நிறுவுவதும் இந்த திட்டங்களில் ஒன்றாகும்.

தேசியப் பாதுகாப்புக்கு இந்தத் திட்டங்கள் மிக முக்கியமானவை என்றாலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதற்கான நிபந்தனைகளை தேசிய வனவிலங்கு வாரியம் வகுத்துள்ளது.

பனிச்சிறுத்தைகள், திபெத்திய மான்கள் மற்றும் புலம்பெயர்ந்த பறவை இனங்கள் போன்ற அரிய வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையிலான தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு, நாட்டின் பாதுகாப்புக்கான 11 ராணுவ உள்கட்டமைப்பு திட்டங்களை அங்கீகரித்தது.

மேலும், உள்ளூர் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த திட்டங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

சாங்தாங் உயர் உயர குளிர் பாலைவன வனவிலங்கு சரணாலயத்தில் 10 திட்டங்களும், துர்டுக் ஜங்பாலில் உள்ள கரகோரம் நுப்ரா ஷியோக் வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு திட்டமும் அமைக்கப் பட உள்ளது.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கும், வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளுக்கும் இடையிலான தற்போதைய சமநிலையை இந்த ராணுவ உள் கட்டமைப்பு திட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

எல்லைப் பகுதிகளில் ராணுவ உள்கட்டமைப்பு மேம்பாடு தேசத்துக்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், நீண்டகால சவால்களுக்கும் பதிலடி கொடுக்க தயார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

Tags: india vs chinaLadakhIndiachinaIndian Army in actionNew strategies
ShareTweetSendShare
Previous Post

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு! : ஒருவர் பலி

Next Post

“வழக்கமான அரசியல் வாதி அல்ல” : PODCAST நிகழ்ச்சியில் மனம் திறந்த பிரதமர் மோடி!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies