ஏழைகளுக்கு சட்ட உதவிகளை உறுதி செய்வது அரசின் பொறுப்பு : அமித்ஷா
Jul 29, 2026, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஏழைகளுக்கு சட்ட உதவிகளை உறுதி செய்வது அரசின் பொறுப்பு : அமித்ஷா

Murugesan M by Murugesan M
Jan 18, 2025, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டதிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை, மூன்று ஆண்டுகளுக்குள் நீதி வழங்கப்படும் என்பதே மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் சாராம்சம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் செய்தது குறித்து புதுதில்லியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில்  மத்தியப் பிரதேசத்தில் காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள், வழக்குத் தொடுத்தல் மற்றும் தடயவியல் தொடர்பான பல்வேறு புதிய விதிகளின் அமலாக்கம் மற்றும் தற்போதைய நிலை குறித்துஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் மத்திய உள்துறை செயலாளர், மத்தியப் பிரதேச தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா,

முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டதிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை, மூன்று ஆண்டுகளுக்குள் நீதி வழங்கப்படும் என்பதே மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் சாராம்சம் என்று தெரிவித்தார்.

புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மத்தியப் பிரதேச அரசு இதுவரை மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டிய அவர், மாநிலத்தில் அவற்றை 100 சதவீதம் விரைவில் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பயங்கரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்வதற்கு முன்பு, மூத்த காவல்துறை அதிகாரிகள் அந்த பிரிவுகளைப் பயன்படுத்த இந்த வழக்கு தகுதியானதுதானா என்பதை ஆராய வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த சட்ட விதிகளை தவறாக பயன்படுத்துவது புதிய குற்றவியல் சட்டங்களின் புனிதத்தை களங்கப்படுத்திவிடும் என்று கூறினார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட தடய அறிவியல் நடமாடும் வாகனங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காணொலிக் காட்சி மூலம் சாட்சியங்களை பதிவு செய்ய வசதியாக மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகளில் போதுமான எண்ணிக்கையில் அறைகள் கட்டப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில், நீண்ட காலமாக நாட்டை விட்டு தலைமறைவாக தப்பியோடியவர்கள் மீது விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்தியக் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தில் விசாரணை செய்வதற்கான வழிவகைகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

பின்தங்கியவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வலுவான சட்ட உதவி முறையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், இதற்கு தேவையான பயிற்சிகள் வழங்குவதின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். ஏழைகளுக்கு சட்ட உதவிகளை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என்று அவர் கூறினார்.

Tags: 3 new criminal billnew criminal laws upscnew criminal law billnew criminal laws explainednew bill criminal lawnew criminal bill india3 new criminal lawsAmit Shahnew criminal billCentral Ministercriminal lawcriminal lawsnew criminal law billsNew Criminal lawsgovernment's responsibility to ensure legal aid to the poornew criminal laws 2024Three new criminal lawsnew criminal laws in india 2024new criminal laws police power
ShareTweetSendShare
Previous Post

தியாகராஜர் ஆராதனை விழா – பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி!

Next Post

இளையராஜாவின் கச்சேரியில் கூட்ட நெரிசல் : திணறிய போலீசார்!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies