மாணவர்கள் தங்கள் பெற்றோரை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி
Jan 19, 2026, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாணவர்கள் தங்கள் பெற்றோரை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

Murugesan M by Murugesan M
Jan 25, 2025, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு உணர்த்தி அவர்களை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிகழ்ச்சி தொடங்கியதும் வாக்காளர் உறுதிமொழியை ஆளுநர் முன்மொழிய, அதனை வழிமொழிந்து பங்கேற்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து தேர்தல் நேரங்களில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

மாநிலம் முழுவதும் தேர்தல் மற்றும் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை விரைவில் 100 கோடியை எட்டவுள்ளதாகவும், வாக்காளர் சதவீதத்தை பெருக்கி அதை சாத்தியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் வாக்களிப்பதை ஊக்குவிப்பதை தாண்டி, வாக்காளர்களை திசை திருப்பும் முயற்சிகளே அதிகம் நடப்பதாக குற்றம் சாட்டினார்.

நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கூறுபவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்த அவர், நம் நாட்டில் நடக்கும் ஜனநாயக முறையிலான வாக்களிப்பை யாரும் குறை கூற முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.

Tags: governor rn ravitn governortamil nadu newstamil janam tv
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி மலைப்பாதையில் பழுதடைந்து நின்ற தேங்காய் ஏற்றி வந்த லாரி!

Next Post

கொடைக்கானல் 62 – வது மலர் கண்காட்சி : மலர் நாற்றுகள் நடும் பணி மும்முரம்!

Related News

வாக்குறுதியை நிறைவேற்ற கோருபவர்கள் மீது கைது நடவடிக்கை – தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

ராமநாதபுரம் அருகே பெண் காவலர் கழிவறையில் வீடியோ எடுத்த விவகாரம் – சிறப்பு எஸ்ஐ கைது!

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு – குற்றபத்திரிகையில் விஜய் பெயர்?

திருச்சி நவலூரில் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்!

நெல்லை அருகே தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

குன்னூரில் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக தேசிய தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார் நிதின் நபின்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சேலம் அருகே காவலரை தாக்கிய இளைஞர் கைது!

ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை  பறித்த ஆம்னி பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டம் என எச்சரிக்கை – தமிழகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை பல்கலைக்கழகத்தில் 9 மாதங்களாக செனட் கூட்டம் நடத்தப்படாததால் முக்கிய பணிகள் பாதிப்பு – பேராசிரியர்கள் குற்றச்சாட்டு!

80, 000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது – சமூக ஆர்வலர்கள் வேதனை!

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் – சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!

ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவவை கூட்டத்தொடர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies