சேலம் அருகே இணைப்புச் சாலை அமைக்காததற்கு எதிர்ப்பு - கிராம மக்கள் சாலை மறியல் !
Jul 29, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் அருகே இணைப்புச் சாலை அமைக்காததற்கு எதிர்ப்பு – கிராம மக்கள் சாலை மறியல் !

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 29, 2025, 09:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் மணிவிழுந்தான் பேருந்து நிறுத்தம் அருகே இணைப்புச் சாலையை அமைக்காத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மணிவிழுந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட வடகுமரை, மணிவிழுந்தான் காலனி, சார்வாய், சார்வாய் புதூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதனிடையே ஆத்தூரில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவடையும் நிலையில் இருக்கின்றன.

ஆனால் மணிவிழுந்தான் பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலையில் இணைப்புச் சாலை அமைக்காதததால் அப்பகுதி மக்கள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மணிவிழுந்தான் தேசிய நெடுஞ்சாலையில் கற்களை போட்டு திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே அவ்வழியாக காரில் வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை வீடியோ எடுத்ததுடன் தனது காருக்கு வழி விடச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரை எடுக்க விடமால் சக்கரங்கள் முன் கற்களை போட்டு மோட்டார் வாகன ஆய்வாளரை காருடன் சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags: connecting road issueVadakumaraiManivizhundan ColonyCharvaiCharvai PuthursalemAthurVillagers protestManivizhundan bus standprotesting against the Highways Department
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முதல்வர் மௌனம் காப்பது ஏன்? – இந்து மக்கள் கட்சி கேள்வி!

Next Post

கூடலூர் அருகே மான் வேட்டையின் தவறுதலாக பாய்ந்த குண்டு – ஒருவர் பலி!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies