ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் முதல்வர் மற்றும் விஜய் - அண்ணாமலை விமர்சனம்!
Jul 26, 2026, 10:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் முதல்வர் மற்றும் விஜய் – அண்ணாமலை விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 12, 2025, 06:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சரும், தவெக தலைவர் விஜயும், ஏசி ரூமில் அமர்ந்து கொண்டே அரசியல் செய்வதாகவும், மக்களோடு மக்களாக வந்து அவர்களுடைய குறைகளை கேட்க யாரும் தயாராக இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பழனி முருகன் கோயிலில் அண்ணாமலை தரிசனம் செய்தார். இதுதொடர்பாக அவர்   விடுத்துள்ள பதிவில்,  ஒரு மண்டல காலம், 48 நாட்கள் விரதம் இருந்து, தைப்பூச தினத்தன்று, அப்பன் முருகப் பெருமானை,பழனி மலையில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பேறாகக் கருதுகிறேன். குன்றெல்லாம் குமரனுக்கே. கந்தனுக்கு அரோகரா என தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை எதுவும் நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.

மக்களுக்கு அல்வா எப்படி கொடுப்பது? என்று தெரிந்து கொள்ளவே முதலமைச்சர் அல்வா கடைக்கு சென்றவதாகவும் அண்ணாமலை சாடினார்.

“முதலமைச்சர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் ஆகியோர் ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்வதாகவும், மக்களோடு மக்களாக வந்து அவர்களுடைய குறைகளை கேட்க யாரும் தயாராக இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

இதுபோன்று தைப்பூச விழாக்களில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கண்டறிய வேண்டும் என்றும்,  அமைச்சர் சேகர் பாபு கடந்த 3 ஆண்டுகாலமாக தேய்ந்த ரெக்கார்டு போல பேசி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சபரிமலையிலும், திருச்சி ஸ்ரீரங்கத்திலும் மக்களை காக்க வைத்து சாமி அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்ததை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, முதலமைச்சர் துணைவியாருக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை சாமானிய மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என அண்ணாமலை  தெரிவித்தார்.

பழனிக்கு பாதயாத்திரை செல்லும்  பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு பிரதமர் மோடி தைப்பூசத்திற்கு வாழ்த்து கூறிய நிலையில், தமிழகத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறவில்லை என்றும் அவர் கூறினார்.

Tags: tamilnadu bjp presdientthai poosamthai poosam festival2025 thai amavasaipoojaiannamalaiPalaniPalani Murugan templeannamalai pressmeet
ShareTweetSendShare
Previous Post

காலத்திற்கு ஏற்றவாறு AI தொழில்நுட்பத்தை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும் – பிரதமர் மோடி

Next Post

பழனி முருகன் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies