முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? : ரஷ்யா-அமெரிக்கா பேச்சில் புதிய திருப்பம் - சிறப்பு தொகுப்பு!
Apr 29, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? : ரஷ்யா-அமெரிக்கா பேச்சில் புதிய திருப்பம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைன் போர் தொடர்பாக, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த உயர்நிலைக் குழு ஒன்றை அமைக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். அமைதிப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உக்ரைன் போர் தொடங்கி மூன்றாவது ஆண்டு நிறைவடைய போகிறது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், உக்ரைன் போர் விஷயத்தில், முன்னாள் அதிபர் ஜோ பைடன் எடுத்த கொள்கை முடிவிலிருந்து, முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ராணுவ நடவ்டிக்கையைத் தொடங்கிய ரஷ்யாவைச் சர்வதேச அரங்கில் தனிப்படுத்தும் நடவடிக்கையை ஜோ பைடன் தீவிரப் படுத்தினார். கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளை, மீண்டும் உக்ரைன் வசம் ஒப்படைக்காத வரை ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை இல்லை என்பதில் ஜோ பைடன் உறுதியாக இருந்தார்.

கடந்த வாரம், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தனித் தனியாக தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், உக்ரைன் போர் தொடர்பான ரஷ்யா, அமெரிக்கா பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

போர் குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 2023-ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புதினை கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. சவூதி அரேபியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு அங்கமாக இல்லை என்பதால் புதின் நாட்டுக்கு அச்சமின்றி செல்லலாம்.

ஏற்கெனவே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கைதிகளை விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தையை நடத்திய நாடுகளில் சவூதி அரேபியாவும் முக்கிய பங்காற்றியது. எனவே தான், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு சவூதி அரேபியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி, அமெரிக்காவும், ரஷ்யாவும் சவூதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. அமெரிக்க தரப்பில், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் மத்திய கிழக்கு மண்டலத்துக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பங்கேற்றனர்.

ரஷ்யா தரப்பில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் மற்றும் ரஷ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் ஆகியோர் இருந்தனர். இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் அழைக்கப்படவில்லை. உக்ரைன் இடம் பெறாத எந்தவொரு அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தையும் ஏற்கப் போவதில்லை என்று என்று அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில், அமெரிக்கா – ரஷ்யா இடையே 3 விஷயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். முதலாவதாக, இரு நாடுகளும் விரைவில் தூதர்களை நியமிக்கும். இரு நாட்டு தூதரகங்களுக்கான வங்கி பரிமாற்றங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அரசு ரீதியிலான பணிகளுக்கு இருந்த தடைகள் நீக்கப்படும்.

இரண்டாவதாக, உக்ரைன் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்படும். இதற்காக அமெரிக்கா தனது பிரதிநிதிகளை முதலில் நியமிக்கும். அதன் பிறகே ரஷ்யா பிரதிநிதிகளை நியமிக்கும். மூன்றாவதாக, பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே முழு ஒத்துழைப்பைத் தொடங்கவும், மேம்படுத்தவும் தேவையான சூழல் உருவாக்கப்படும்.

நேட்டோ உறுப்பினராக உக்ரைன் இணைவது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் விவரித்துள்ளார். ரஷ்யா மீதான தடைகள் குறித்து, அனைத்து தரப்பினரும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, சில காலத்துக்கு பின் ஐரோப்பாவும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இணைய வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில், ஐரோப்பாவை அமெரிக்கா ஆதரித்த பழைய நாட்கள் முடிந்துவிட்டன என்றும், ரஷ்யாவுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள “ஐரோப்பாவின் ராணுவம்” ஒன்றைப் புதிதாக உருவாக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் ஜெலன்ஸ்கியின் அதிபர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால், உக்ரைன் அதிபராக ஜெலன்ஸ்கி சட்டப்பூர்வமாக நீடிக்கிறாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பின்றி அமைதிப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்காவும் ரஷ்யாவும் முன்னெடுத்து செல்கின்றன. இதனால், உக்ரைன் குறித்த முக்கியமான முடிவுகளில் ஐரோப்பிய நாடுகள் ஓரங்கட்டப்படுகின்றன.

இந்தச் சிக்கலை எதிர்கொள்ள, பாரிஸில்,அவசர உச்சிமாநாட்டை ஐரோப்பிய நாடுகள் கூட்டியுள்ளன. இதில்,பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, போலந்து, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகளால், வரும் ஆண்டுகளில் ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பு மாற்றியமைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Riyadhrussia america hold talkrusssia Ukraine warrusssia Ukraine war peace talksrussiasaudi arabiaputinTrump
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் டெஸ்லா EV கார் : 60 நாட்களில் விற்பனை தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

சீரான வேகத்தில் இரு கட்டங்களாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள்!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies