சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் - இறுதிப்போட்டியில் இந்தியா!
Sep 18, 2026, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் – இறுதிப்போட்டியில் இந்தியா!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2025, 10:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொண்டது.

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 73 ரன்களும், அலெக்ஸ் கேரி 61 ரன்களும் எடுத்தனர். இந்திய வீரர் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 28 ரன்களிலும், சுப்மன் கில் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

இருந்தபோதும், பொறுப்புடன் விளையாடி விராட் கோலி 84 ரன்கள் குவித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களும், கே.எல்.ராகுல் 42 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதன் மூலம் 48.1 ஓவர்களில் 267 ரன்கள் குவித்து இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது.

மேலும், சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் முதல் அணியாக இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது. இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஐசிசியின் அனைத்து வகையான தொடர்களிலும், இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார். 2023ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியை ரோஹித் சர்மா அழைத்து சென்றார்.

மேலும், கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரிலும் ரோஹித் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் அரையிறுதியில் இந்திய அணி வெற்றிப்பெற்றதையடுத்து, ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் திரண்ட இந்திய ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், தேசியக்கொடியே ஏந்தியபடி இந்திய அணிக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் பெண்கள் உள்ளிட்ட பலரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டின் முன்பு பட்டாசுகள் வெடித்து அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கில் குவிந்த இந்திய அணி ரசிகர்கள், பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், தேசியக்கொடியை ஏந்திபடிய நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் ஆடிப்பாடி இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினர். அரையிறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags: rohit sharmaIndia defeated AustraliaChampions Trophy seriesindia in finals icc trophy
Share
Tweet
SendShare
Previous Post

தமிழை வளர்க்க திமுக அரசு என்ன செய்தது? – அண்ணாமலை கேள்வி!

Next Post

பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி!

Related News

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

இந்தியாவில் ஹாஸ்பிடாலிட்டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி : பாரதி மெராகியின் Tier 2, Tier 3 நகரப் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies