நாக்பூரில் அவுரங்சீப் சமாதி விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் மோதல் - 144 தடையுத்தரவு அமல்!
Jul 29, 2026, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாக்பூரில் அவுரங்சீப் சமாதி விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் மோதல் – 144 தடையுத்தரவு அமல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 18, 2025, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் அவுரங்சீப் சமாதி விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகராஷ்டிரா சட்டப்பேரவையில் பேசிய சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி, முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசினார். இதன் காரணமாக அவர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது இந்த பேச்சின் எதிரொலியாக, சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்பினர் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாக்பூரிலும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது இரு பிரிவினரிடையே திடீரென மோதல் வெடித்தது. இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில், கல்வீச்சு தாக்குதல்களும் நடைபெற்றன.

கலவரத்தை கட்டுப்படுத்த உடனடியாக நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருந்தபோதும் போலீசார் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எனவே, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த கலவரம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நாக்பூரின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவுரங்சீப் சமாதிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் யாராவது செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அவர், அமைதி சீர்குலையாமல் இருக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tags: MAHARASHTRAAurangzeb Samadhi issueamajwadi MLA Abu Hashmi praised Mughal Emperor Aurangzeb.144 prohibitory orders in nagpur
ShareTweetSendShare
Previous Post

சுவாமிமலை முருகன் கோயில் பங்குனி பெருவிழா!

Next Post

தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை – நயினார் நாகேந்திரனின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் துரைமுருகன்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies