கச்சத்தீவை மீட்கக் கோரும் வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!
Jul 29, 2026, 09:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கச்சத்தீவை மீட்கக் கோரும் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 25, 2025, 09:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கச்சத்தீவை மீட்கக் கோரிய வழக்கு 5 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

கச்சத்தீவை மீட்கக்கோரி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2008ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கச்சத்தீவு தொடர்பாக 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இரு ஒப்பந்தங்களையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும், கச்சத்தீவு மீண்டும் இந்தியாவின் அங்கமாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2009ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், வழக்கு விசாரணை தாமதமானதால், விரைந்து விசாரிக்கக் கோரி 2012ஆம் ஆண்டு ஜெயலலிதா சார்பில் மீண்டும் ஒரு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், 2011ல் முதலமைச்சராக பதவியேற்றதும் கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்த அனைத்து தகவல்களையும் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த்துறையும் இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை தமிழக அரசின் வருவாய்த்துறை 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கச்சத்தீவை மீட்கக் கோரிய வழக்கு கடைசியாக 2020ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Tags: supreme courtKatchatheevu hearigFormer Chief Minister Jayalalithaa
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 1,905 பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிப்பு – மத்திய அரசு

Next Post

நடப்பாண்டில் சுமார் 7000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – ஆசிரியர் தேர்வு வாரியம்

Related News

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies