2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டிணத்தில் இருந்து விண்ணுக்கு ராக்கெட் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்
Sep 3, 2026, 10:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டிணத்தில் இருந்து விண்ணுக்கு ராக்கெட் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

Murugesan M by Murugesan M
Apr 18, 2025, 03:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டிணத்தில் இருந்துவிண்ணுக்கு ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசியவர்,

இஸ்ரோவில் 2025-ல் நிறையச் சாதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜனவரி 6-ம் தேதி ஆதித்தியா எல்-1 நிலை நிறுத்தியிருக்கிறோம் என்றும் அதிலிருந்து நிறைய சயிண்டிக்கல் டேட்டாக்கள் கிடைத்தன. கடந்த ஜனவரி 16-ல் ஸ்பீடேக்ஸ் எனும் இரண்டு செயற்கைக் கோளையும் இணைத்து சாதனை நடந்தது என தெரிவித்தார்.

மார்ச் 13-ம் தேதி மறுபடியும் செப்பரேட் பண்ணி சாதனை படைத்துள்ளோம். இந்த சாதனை செய்ததில் இந்தியா 4-வது நாடு ஆகும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

சர்க்கன் நேவிகேஷன் என்ற முறையில் ஒரு சேட்டிலைட் சுற்றிக்கொண்டிருக்கும், அதை மற்றொரு செயற்கைகோள் கண்காணித்துக்கொண்டிருக்கும். ஜனவரி 29-ம் தேதி 100-வது ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்டது.

மேலும் 3-வது லாஞ்ச் பேட்  ஸ்ரீஹரிகோட்டாவில் 42 மாதத்தில் அமைக்க  4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நம்மிடம் லிக்யூட் ராக்கெட் இன்ஜினில் பெரிய ஹெப்பாசிட் உள்ளது. விகாஷ் இன்ஜின். 80 டன் ட்ரஸ்ட் கொடுக்கும். இப்போது திரவ ஆக்சிஜனையும், மண்ணெண்ணெய்யையும் வைத்து 200 டன் எடையுள்ள இன்ஜின் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக மகேந்திரகிரியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சோதனை கூடம் ஒன்றைப் பிரதமர் மோடி கடந்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதில் வைத்து புதிதாக டெவலப் செய்த எஞ்சின் பவர் கெட்டை வெற்றிகரமாக செய்திருக்கிறோம்.

இது பெரிய  சாதனையாகும். அதில் சில சோதனைகள் எல்லாம் உள்ளன. அதை முடித்துவிட்டு வரும் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் லிக்யூட் ஆக்ஸிஜன் மீத்தேனை வைத்து மார்க்-3 ராக்கெட்டை நிலவுக்கு அனுப்ப திட்டம் இருக்கிறது என இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.

மார்க் -3 ராக்கெட் 4000 கிலோ எடையுள்ள செயற்கைகோளை செலுத்த முடியும் என்றும் சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வர உள்ளதாகக் கூறியிருக்கிறார். சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குக் கொண்டுசென்ற மாடிபையில் உள்ள ட்ரஸ்ட் ஹீட் ஆகிவிட்டது. அதே பிரச்சனை கடந்த ஆண்டு நமக்கு மகேந்திரகிரியில் நடந்தது. சுனிதா வில்லியம்ஸ்-க்கு ஏற்பட்ட சிக்கலை நாம் படித்து வருகிறோம்.

வரும் மே மாதம் பி.எஸ்.எல்.வி 61வது ராக்கெட்டை அனுப்ப இருக்கிறோம். மேலும் இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து செய்த தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை மார்க் -3 மூலம் ஜூலை மாதம் விண்ணில் அனுப்ப உள்ளோம். மகேந்திரகிரியில் நிறைய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

முன்பு இஸ்ரோ மட்டுமே இந்திய விண்வெளிக்கான எல்லா வேலைகளையும் செய்துவந்தது. இப்போது ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருந்தாலும் சரி, இளைஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை ராக்கெட் தயாரித்தல், சாப்ட்வேர் உருவாக்குதல் போன்றவற்றை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களுக்கு சப்போர்ட் செய்து, ஊக்குவிக்குவித்து வருகிறோம்.

கன்னியாகுமரி சன் செட் பாயின் அருகே ஸ்பேஸ் பூங்கா அமைக்க உள்ளோம். அதற்கான நிலம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளனர். குலசேகரபட்டிணத்தில் 95 சதவிகிதம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டன. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டிணத்தில் இருந்து ராக்கெட் விண்ணுக்குப் புறப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.

Tags: இஸ்ரோ தலைவர் நாராயணன்Rocket to be launched from Kulasekarapattinam within 2 years: ISRO Chairman Narayananராக்கெட்மார்க் -3 ராக்கெட்
Share
Tweet
SendShare
Previous Post

விருதுநகர் : மதுபான பாரில் இலவசமாக சைடிஸ் கேட்டதால் தகராறு!

Next Post

பஞ்சாப் : ரீல்ஸ் எடுப்பதற்காக சாலையோரம் கவர்ச்சி நடனம்!

Related News

அரபிக்கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் : மழை குறைய வாய்ப்பு? – சிறப்பு தொகுப்பு!

டாலரின் ஆதிக்கத்தை குறைக்க உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் : பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முடிவு – சிறப்பு கட்டுரை!

செங்குன்றத்தில் லலிதா ஜுவல்லரியின் 65-வது கிளை திறப்பு!

வாரணாசி வெள்ள பாதிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

எந்த பணியில் இருந்தாலும் மனிதத்தன்மையோடு செயல்பட வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் தமிழகம் ரிவர்ஸ் கியரில் செல்கிறது – பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் – சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்!

இன்றைய தங்கம் விலை!

ரூ. 1, 200 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்ற வளாகம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல்!

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் – புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

மேட்டூர் நீர் கடைமடை வரை செல்வது சந்தேகமே – பொன்.ராதாகிருஷ்ணன்

ஆசிய விளையாட்டு போட்டியில் தனிநபர் மற்றும் அணிகளுக்கான போட்டி என இரண்டு பிரிவிலும் பங்கேற்பேன் – பி.வி.சிந்து

சுருக்குமடி வலையை பயன்படுத்த முழுவதும் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies