ஆபரேஷன் சிந்தூர் 2.0 : பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்த இந்தியா!
Sep 13, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்த இந்தியா!

Murugesan M by Murugesan M
May 10, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயங்கரவாதத்துக்கு ஆதரவாக, இந்திய இராணுவத் தளங்களைக் குறிவைத்து, பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை ஒரே இரவில் இந்தியா முறியடித்துள்ளது.  லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஏவுகணைகளும் ட்ரோன்களும் வானத்தை ஒளியைச் சிதறிக் கொண்டு பறந்தன.விண்ணைப் பிளக்கும் வெடிச்சத்தங்கள் ஜம்முவை உலுக்கின. அதைத் தொடர்ந்து சைரன்கள் அலறின. அவசர மின்தடை அமலுக்கு வந்தது. ஊரெங்கும் இருட்டு. இருட்டு வானில் தோன்றி மறையும் மின்னல்கள் போலப் பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் நடுவானில் இடைமறித்து அழித்தன.

அதிர்ச்சியடைந்த நிலையில் மக்கள், அச்சத்துடனும் ஆச்சரியத்துடனும் இந்த காட்சிகளைத் தங்கள் செல்போனில் வீடியோக்களாக பதிவு செய்தனர். அந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஜம்மு-காஷ்மீரைத் தாண்டி, சண்டிகர், ஃபெரோஸ்பூர், மொஹாலி மற்றும் குருதாஸ்பூர் உள்ளிட்ட பஞ்சாப் பகுதிகளுக்கும் மின் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில், ராணுவ உள்கட்டமைப்பு பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தின் மையமாக விளங்கும் பாகிஸ்தான், வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் முக்கிய நகரங்களில் உள்ள இந்திய இராணுவத் தளங்களைக் குறிவைத்து  ஏவுகணை மற்றும் ட்ரான் தாக்குதல்களை நடத்தியது.

ஜம்மு விமான நிலையம், சம்பா,ஆர்.எஸ்.புரா, அர்னியா ஆகிய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 8 ஏவுகணைகளை, இந்தியாவின் S-400 வான் தடுப்பு பாதுகாப்பு வெற்றிகரமாக இடை மறித்து சுட்டு வீழ்த்தியுள்ளன. மேலும் பதான்கோட், உதம்பூர் இராணுவத் தளங்களை நோக்கி பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களையும் இந்தியா முறியடித்துள்ளது.

இந்த தாக்குதலில்  உயிரிழப்புமில்லை,  பொருள் சேதமுமில்லை என்று கூறியுள்ள இந்திய ராணுவம்,  தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியா முழுஅளவில் தயாராக உள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தச் சூழலில், பதான் கோட், அமிர்தரஸ்,ஜலந்தர், மொஹாலி ஆகிய மாவட்டங்களிலும்,சண்டீகரிலும் மின்சாரம் துண்டிக்கப் பட்டன. ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில், குறிப்பிட்ட சில பகுதிகளில், குறிப்பாக இராணுவ உள்கட்டமைப்பு அமைந்துள்ள இடங்களில், முன்னெச்சரிக்கை மின் தடை உத்தரவிடப்பட்டது.

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் தோல்வியை மறைப்பதற்காக,எல்லை கட்டுப் பாட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையே,அதிநவீன ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகளை இந்திய இராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகர், சண்டிகர், ஜெய்சால்மர், ஜோத்பூர் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் மூடல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் இரண்டு நாட்களுக்குப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளை வேரறுக்கும் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்கிறது.

Tags: pakistanஆபரேஷன் சிந்தூர் 2.0Operation Sindoor 2.0: India foils Pakistan's drone attack
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் – யார் இந்த கர்னல் சோபியா குரேஷி?

Next Post

போர் நிறுத்தம் : இயல்பு நிலைக்கு திரும்பி எல்லைப் பகுதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies