மயானமாகும் காசா : இஸ்ரேல் கொடூர தாக்குதல் - மருத்துவரின் குழந்தைகள் பலி!
Jul 23, 2026, 07:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மயானமாகும் காசா : இஸ்ரேல் கொடூர தாக்குதல் – மருத்துவரின் குழந்தைகள் பலி!

Murugesan M by Murugesan M
May 26, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கற்பனை செய்து பார்க்க முடியாத சோகமாக, காசாவில் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில், ஒரு மருத்துவ தம்பதியரின் 9 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள  இந்த சோகம் பற்றிய செய்தி தொகுப்பு.

2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய படுகொலை  தாக்குதலுக்குச் சரியான பதிலடி ஹமாஸை ஒட்டுமொத்தமாக அழிப்பதாகும் என்று சூளுரைத்த இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதத்தை ஒழிப்பது  தங்களின்  உரிமை மட்டுமல்ல கடமை  என்றும் உறுதியாகத் தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நடந்த போரில், இதுவரை சுமார்  16,500 குழந்தைகள் உட்படக் குறைந்தது 55,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கடந்த மார்ச் மாதத்தில், காசா மீது  முழுமையான முற்றுகையை விதித்த இஸ்ரேல், மீண்டும் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் விளைவாக இதுவரை சுமார் 4000 கொல்லப்பட்டுள்ளதாகவும் 500,000க்கும் மேற்பட்ட மக்கள் உணவுப் பாதுகாப்பின்றிப் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும்  இரண்டு மாதங்களுக்குள் காசாவின் சுமார் 75 சதவீத நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதே இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையின் நோக்கமாகும்.

காசாவின் கான் யூனிஸ் பகுதியை  ஒரு ஆபத்தான போர் மண்டலமாக அறிவித்த இஸ்ரேல், அப்பகுதி மக்களை நகரத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரித்திருந்தது. எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் திடீரென காசா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இலக்குகளைக் குறிவைத்து  இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் தொடங்கிய 24 மணி நேரத்தில் 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில், ஹம்தி அல்-நஜ்ஜார் என்ற மருத்துவர், குழந்தை மருத்துவரான தனது மனைவி அலா நஜ்ஜரை, வேலைக்கு அழைத்துச் சென்றுவிட்டு, வீடு திரும்பிய சில நிமிடங்களுக்குப் பிறகு அவரது வீடு தாக்கப்பட்டுள்ளது.  காசா சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் டாக்டர் முனீர் அல்போர்ஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேலின் இந்த தாக்குதலில், இந்த மருத்துவ தம்பதியரின் பத்து குழந்தைகளில், ஏழு மாதங்கள் முதல் 12 வயதுக்கு உட்பட்ட ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலில் உயிர் பிழைத்த ஒரேயொரு மகனும், படுகாயமடைந்த  ஹம்தி அல்-நஜ்ஜாரும் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காசாவின் கொடுமையான நிலைமை இதுதான் என்று கூறியுள்ள காசா சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் டாக்டர் முனீர் அல்போர்ஷ், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை  மட்டும் குறிவைக்காமல், அவர்களின் முழு குடும்பத்தையும் இஸ்ரேல் அழித்துவிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

குழந்தை மருத்துவராகப் பல ஆண்டுகளாகப் பல குழந்தைகளைப் பராமரித்து வந்த  அலா நஜ்ஜர், இஸ்ரேலின் ஒரே ஏவுகணைத் தாக்குதலில் கிட்டத்தட்ட தனது 9 குழந்தைகளை இழந்த துயரம், தாங்கமுடியாத கொடூரமாகும்.  ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசாவில் கேட்கும் துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டுகளின் சத்தங்களை விட அதிகமாக மொத்த குடும்பத்தை இழந்துள்ள டாக்டர் அலாவின் கூக்குரல், உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது.

Tags: இஸ்ரேல் தாக்குதல்Gaza is a graveyard: Israel's brutal attack - Doctor's children killedமயானமாகும் காசாகுழந்தைகள் பலி
ShareTweetSendShare
Previous Post

சிந்து நதி நீர் நிறுத்த விவகாரம் : ஐ.நா சபையில் இந்தியாவிடம் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்!

Next Post

இந்தியாவின் இளம் நம்பிக்கை சாய் சுதர்சன்!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies