ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!
Apr 30, 2026, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

Murugesan M by Murugesan M
Jun 4, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் ராணுவ பலம் உலகுக்கு உணர்த்தப்பட்டுள்ள நிலையில் தேசப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘அக்னி 6’ ஏவுகணையை நம்நாடு உருவாக்கி வருகிறது. அதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

உலகின் சக்திவாய்ந்த வல்லரசாக உருவெடுக்கும் பயணத்தில் பொருளாதாரம் மற்றும் ராஜாங்க ரீதியிலான உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி தேசப் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளிலும் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான எல்லைப் பிரச்சனைகளைச் சமாளிக்கத் தேவையான ராணுவத் தளவாடங்களை இந்தியா உருவாக்கி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள ‘அக்னி 5’ ஏவுகணை இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி 5’ ஏவுகணை இந்தியாவின் பெருமையாகக் கருதப்படுகிறது. அணு ஆயுதங்களைச் சுமந்துகொண்டு ஏழாயிரம் கிலோ மீட்டர் பறந்து சென்று தாக்கும் வல்லமை ‘அக்னி 5’-க்கு உண்டு. இதைவைத்து சீனத் தலைநகர் பீஜிங்கைக்கூட தாக்க முடியும்.

‘அக்னி 1’ மற்றும் ‘அக்னி 2’ ஏவுகணைகள் பாகிஸ்தானைச் சமாளிப்பதற்காகத் தயாரிக்கப்பட்டவை. அதாவது குறைந்த தூரத்தில் இருக்கும் இலக்குகளைத் தாக்குவதற்காக உருவாக்கப்பட்டவை. ஆனால் ‘அக்னி 5’ சீனாவுக்காகவே SPECIAL-ஆக தயாரிக்கப்பட்டது. மிக விரைவாக இலக்கைச் சென்றடையும் திறன் கொண்ட ‘அக்னி 5’ ஏவுகணையை இடைமறிப்பது கடினம்.

மேலும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று வெவ்வேறு இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பல்வேறு இடங்களைத் தாக்க ஒரேயொரு ‘அக்னி 5’ ஏவுகணையே போதுமானது.

அந்நாடு உருவாக்கியுள்ள ‘ஷாஹீன் 3’ ஏவுகணையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ‘அக்னி 5’ அதிக திறன்களைக் கொண்டது. சீனாவின் ‘DONGFENG 41’ ஏவுகணைக்கும் கடும் சவாலைக் கொடுக்கக் கூடியது.

தேசப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘அக்னி 6’ ஏவுகணையை உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. 8,000 முதல் 12,000 கிலோ மீட்டர் வரை பறந்து சென்று தாக்கும் திறனோடு தயாரிக்கப்படும் ‘அக்னி 6’ ஏவுகணையில் ஒரே நேரத்தில் 10 அணு ஆயுதங்களை இணைத்து அனுப்ப முடியும். இதன்மூலம் 10 வெவ்வேறு இலக்குகளை ஒரே சமயத்தில் தாக்க முடியும்.

இந்தியாவிலிருந்தபடியே பாகிஸ்தான், சீனா மட்டுமின்றி சில ஐரோப்பிய நாடுகளையும் ஆப்ரிக்காவையும்கூட தாக்க முடியும் என்றால் ‘அக்னி 6’ ஏவுகணையின் சக்தி எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நிலத்தில் இருந்தும் நீர்மூழ்கி கப்பலில் இருந்தும் ‘அக்னி 6’ ஏவுகணையை ஏவ முடியும். இது பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா மாறும்.

‘அக்னி 5’ மற்றும் ‘அக்னி 6’-க்கு போட்டியாக ‘ABABEEL’ என்னும் ஏவுகணையை உருவாக்கியிருப்பதாகப் பாகிஸ்தான் கூறினாலும் அதன் சக்தி இதுவரை மெய்ப்பிக்கப்படவில்லை. அதேபோல் இந்தியாவைச் சமாளிக்க புதிய ஏவுகணைகளைத் தயாரிக்க வேண்டிய கட்டாயத்துக்குச் சீனா ஆளாகியுள்ளது.

பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே ‘அக்னி 6’ ஏவுகணையைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியும். அதற்கான வேலைகளில் DRDO ஈடுபட்டுள்ளது. தற்காப்புக்காகவும் சீண்ட நினைக்கும் எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவும் தான் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணைகளை இந்தியா உருவாக்குகிறது.

அண்டை நாடுகளுடன் அமைதியான உறவைப் பேணவே இந்தியா விரும்புகிறது. போரின் போது அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தமாட்டோம் என்பதே இந்தியாவின் கொள்கை. எனவே நாம் பூப்பாதையை தேர்வு செய்ய வேண்டுமா? அல்லது சிங்கப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா? என்பது எதிரிகளின் செயல்பாட்டைப் பொறுத்தே அமையும்.

Tags: சீனாஇந்தியாIndia starts the game: 'Agni 6' missile makes China scream‘அக்னி 6’ ஏவுகணை
ShareTweetSendShare
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies