ஈரான் தலையில் கட்டிய சீனா : பாகிஸ்தானில் பலிக்காத HQ-9B பாதுகாப்பு அமைப்பு!
Sep 12, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஈரான் தலையில் கட்டிய சீனா : பாகிஸ்தானில் பலிக்காத HQ-9B பாதுகாப்பு அமைப்பு!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 09:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூரில், இந்தியாவின் துல்லியமான தாக்குதல்களுக்கு முன், சீனாவின் ரேடார் பயனற்றது என்பது நிரூபிக்கப்பட்டது. எனினும், ஈரானை ஏமாற்றிப் பாதுகாப்பு அமைப்பைச் சீனா விற்றுள்ளது தெரியவந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

HQ-9B என்பது சீனாவில் வடிவமைக்கப்பட்ட ஒரு நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்பாகும். அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தொழில்நுட்பங்களுடன் உருவான இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, எதிரி விமானங்கள், ட்ரோன்கள்,   பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாகும். அதிகபட்சம் 300 கிலோமீட்டர்  தூரத்துக்குள் ஒரே நேரத்தில் 10 இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாகும்.

2021 ஆம் ஆண்டில் HQ-9B-யை தனது இராணுவத்தில் சேர்த்தது பாகிஸ்தான். இந்தியாவின் ரஃபேல்,  பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை இடைமறிக்க இது உதவும் என்று பாகிஸ்தான் நம்பி வாங்கியது. ஆனால் பாகிஸ்தானின் நம்பிக்கை இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூரில் வீணாகிப்  போனது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை, HQ-9B, HQ-16 மற்றும் PL-15  ஏவுகணைகள் உள்ளிட்ட சீனா பாகிஸ்தானுக்கு வழங்கிய ஆயுதங்கள்  எல்லாம் இந்தியாவின் துல்லியமான தாக்குதல் செயல்திறனுக்கு முன்,பயனற்றவை என்பதை உலகுக்கு நிரூபித்தது.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு, பாகிஸ்தான் மீது  ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் ஈரான் தாக்கிய போதும், அவற்றை இடைமறிக்க முடியாமல் HQ-9B திணறியது. ரஷ்யாவின் S-400க்கு இணையான வான் பாதுகாப்பு அமைப்பு என்று கூறப்படும் HQ-9B, ஆப்ரேஷன் சிந்தூரில் செயலற்று போனதற்கு, பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதிநவீன பாதுகாப்பு அமைப்பை இயக்க போதுமான பயிற்சி இல்லாத பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்  முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக, இந்தியாவின் மின்னணு போர் மற்றும் ஸ்டெல்த் ஏவுகணைகள் HQ-9B இன் ரேடாரைக்  குழப்பியிருக்கலாம் என்றும், அதிக பராமரிப்பு செலவுகள் காரணமாக,  பாகிஸ்தானில் உதிரிப் பாகங்களின் பற்றாக்குறையால் செயல்பாட்டுத் தயார்நிலையில் இல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் பிரம்மோஸ் போன்ற அதிநவீன க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டதாக HQ-9B இல்லை என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர். நான்கு நாட்கள் நடந்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில்,  பாகிஸ்தான் இராணுவத்தின் தோல்வி, சீனாவின்     HQ-9B வான் பாதுகாப்பு அமைப்பின் நம்பகத்தன்மையையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.

இந்தச் சூழலில், HQ-9B வான் பாதுகாப்பு அமைப்பை ஈரானுக்குச் சீனா வழங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து, கடுமையான புவிசார் அரசியல் சவால்களையும் ராணுவ அச்சுறுத்தல்களையும் ஈரான் எதிர்கொள்கிறது.

வான்வழித் தாக்குதல்களைத் துல்லியமாக  இடைமறித்து அளிக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளை வைத்திருப்பது ஈரானின் தேவையாக உள்ளது.  நீண்ட தூர வான் பாதுகாப்பை வழங்கும்   சீனாவின் HQ-9B யை நிலைநிறுத்த ஈரான் முடிவெடுத்துள்ளது.

பாகிஸ்தானில் வான் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் சேதமடைந்த தனது  HQ-9Bயின்  செயல்திறனை மீண்டும் நிரூபிக்க ஈரானைச் சீனா பயன்படுத்திக் கொள்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானுடனான இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு நிலையான மற்றும் சாத்தியமான தள்ளுபடியில் எண்ணெய் விநியோகத்துக்கு வழிவகை செய்துள்ளது.

ஈரான் தனது வீரர்களுக்கு முழுமையான பயிற்சியை உறுதி செய்தாலும், பராமரிப்பு மற்றும் உதிரிப் பாகங்களுக்குச் சீனாவை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இஸ்ரேலும், அமெரிக்காவும் எதிரியின் ரேடார் கண்ணுக்குப் புலப்படாத போர் விமானங்கள் மற்றும் HQ-9B இன் ரேடார் அமைப்புகளைத் தவிர்க்கக்கூடிய அதிநவீன  ஏவுகணைகளைக் கொண்டுள்ளன.  இந்நிலையில், ஈரானில் சீனாவின் HQ-9B தனது செயல்திறனை நிரூபிக்குமா என்பது கேள்வியாகவே உள்ளது.

HQ-9B அமைப்பைத்  திறம்பட ஒருங்கிணைத்து வெற்றிகரமாகப் பயன்படுத்துவது, மத்திய கிழக்கில் போர் களத்தின் போக்கையே மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: HQ-9B பாதுகாப்பு அமைப்புiran vs chinaChina has tied Iran's headசீனாஈரான்China's failed HQ-9B defense system in PakistanHQ-9B security system fails in Pakistanஈரான் தலையில் கட்டிய சீனா
Share
Tweet
SendShare
Previous Post

ஏர் இந்தியா விமான விபத்து : FUEL SWITCH காரணமா? – வெளியான புதிய தகவல்!

Next Post

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies