கட்டளை வாய்க்கால் புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்த நிதி பற்றாக்குறையா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Jul 31, 2026, 12:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கட்டளை வாய்க்கால் புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்த நிதி பற்றாக்குறையா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 18, 2025, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேனா சிலைக்கும் கார் ரேசுக்கும் பல நூறு கோடி ரூபாய்களை செலவு செய்ய தயாராக இருக்கும் திமுக அரசு, கட்டளை வாய்க்கால் புனரமைப்புத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தாமல்  நிதி பற்றாக்குறை என முதலைக் கண்ணீர் வடிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களின் பாசன ஆதாரமாகத் திகழும் கட்டளை வாய்க்காலின் புனரமைப்புத் திட்டத்தை நிதிப் பற்றாக்குறை என்று கூறி 2021-ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தி, விவசாயிகளின் வயிற்றில்  திமுக அரசு அடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

புனரமைப்புத் திட்டத்தைக் கைவிட்ட காரணத்தால், புதர் மண்டிக் கிடப்பதோடு, செடி கொடிகள் வளர்ந்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வருவதில் சிரமமாகி பயிர்கள் வாடி வதங்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பருவமழைப் பொய்த்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை மட்டுமே சாகுபடிக்காக விவசாயிகள் நம்பி வரும் வேளையில், வாய்க்காலைப் புனரமைக்காமல் காலந்தாழ்த்துவது முறையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேனா சிலை, கார் ரேஸ் என பல வீண் ஆடம்பர விளம்பரங்களுக்கு செலவு செய்யத் தயாராக இருக்கும் திமுக அரசு, உழவர் நலனைக் காப்பதற்காக மட்டும் செலவு செய்ய யோசிப்பது ஏன்? என்றும், நான்காண்டுகளாக உழவர் நலனைக் கண்டுகொள்ளாது இத்திட்டத்தைக் கிடப்பில் போடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியா? என்றும் அவர் வினவியுள்ளார்.

விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட கண்டுகொள்ளாது, மேடைகளில் மட்டும் “நானும் டெல்டாக்காரன் தான்” என்று முழங்கும் இந்த விளம்பர மாடல் ஆட்சியை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள் விரட்டியடிப்பர் என்பது உறுதி என்றும நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: pen statuewelfare of farmersDMK governmentNainar NagendranBJP state president Mr. Nainar NagendranKattala Canal
ShareTweetSendShare
Previous Post

தான் பயின்ற பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பழங்குடியின பெண்!

Next Post

ஹரித்வாரில் ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது தூவப்பட்ட மலர்கள்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies