13,700 அடி உயரத்தில் விமானப்படை தளம் : சீனாவுக்கு சவால் அளிக்கும் இந்தியா!
Sep 2, 2026, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

13,700 அடி உயரத்தில் விமானப்படை தளம் : சீனாவுக்கு சவால் அளிக்கும் இந்தியா!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 09:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

13 ஆயிரத்து 700 அடி உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான விமானப்படைத் தளம் விரைவில் திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. சீனாவுக்குக் கிலியை ஏற்படுத்தும் இந்த விமானப்படைத் தளம் எங்கு உள்ளது? பார்க்கலாம் விரிவாக.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட கடும் மோதலை தொடர்ந்து,எல்லையில் இருதரப்பும் படைகளைக் குவித்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

தூதரக மற்றும் ராணுவ ரீதியிலான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் டெம்சோக், டெப்சாங் தவிர பிரச்சனைக்குரிய பிற இடங்களிலிருந்து படைகள் திரும்பப்பெறப்பட்டன. பின்னர் கடந்த ஆண்டு டெம்சோக், டெப்சாங் பகுதிகளில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன.

இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையிலும், சீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாகவும் கிழக்கு லடாக்கில், ராணுவத்தை வலுப்படுத்தி வருகிறது இந்தியா… அதன் ஒருபகுதியாகச்  சீனாவையும், இந்தியாவையும் பிரிக்கும் எல்லாக்கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து வெறும் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நியோமாவில் புதிய விமானப்படைத் தளத்தை இந்தியா அமைத்து வருகிறது.

13 ஆயிரத்து 700 அடி உயரத்தில் 214 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இந்த விமானப்படை தளம் அக்டோபர் மாதத்திற்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விமானங்கள், அவசரக்கால மீட்பு விமானங்கள்,சரக்கு விமானங்களைக் கையாளும் வகையில், புதிய விமானப்படைத் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. 3 கிலோ மீட்டர் நீளமுள்ள மேம்படுத்தப்பட்ட ஓடுபாதை அனைத்து வகை விமானங்களையும் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மலைகள் நிறைந்த,சாலைவசதிகள் அற்ற வடக்கு பகுதியை எளிதாகச் சென்றடையும் வகையில் பாதுகாப்பு அரணாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விமானப்படைத் தளம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இந்தியாவின் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளில் விரைவாக ராணுவ கட்டுமானங்களை ஏற்படுத்த முடியும் என்பதோடு, வடக்கில் உள்ள மாநிலங்களைச் சங்கிலி போல் இணைக்க விமானங்களையும் இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதிகளில் இந்தியா, சீனா இடையிலான ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு நியோமா விமானப்படைத் தளம் முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Air Force base at 13700 feet: India challenges China!விமானப்படை தளம்Indiaindian armyஇந்தியாchina news today
Share
Tweet
SendShare
Previous Post

ராணுவ வலிமை பட்டியல் : 4ம் இடம் பிடித்த இந்தியா – பின்னடைவை சந்தித்த பாகிஸ்தான்!

Next Post

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

Related News

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies