தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 27, 2025, 09:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனைய கட்டடம் உட்பட 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மாலத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, தனது பயணத்தை நிறைவு செய்துவிட்டு 2 நாட்கள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய உடையில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு, எல்.முருகன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து விழா மேடைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, வள்ளுவர் கோட்டத்தின் மாதிரி நினைவுப் பரிசை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி கெளரவித்தார்.

தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடம் உட்பட 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரை அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையை திறந்து வைத்த பிரதமர், மதுரை- போடிநாயக்கனூர் இடையே மின்மயமாக்கப்பட்டுள்ள ரயில் வழித்தடத்தையும் தொடங்கி வைத்தார்.

அதேபோல், நாகர்கோவில் டவுன் – நாகர்கோவில் சந்திப்பு – கன்னியாகுமரி இடையிலான இரட்டை ரயில் பாதையையும், ஆரல்வாய்மொழி- நாகர்கோவில் சந்திப்பு மற்றும் நெல்லை மேலப்பாளையம் இடையிலான இரட்டை ரயில் பாதையையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தொடர்ந்து விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது முனைய கட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு எடுத்துரைத்தார்..

Tags: new terminal building of the Thoothukudi airport.prime minister narendra modithoothukudi airportmodi tamilnadu visit
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

Next Post

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies