ஆணவ படுகொலை வழக்கை மூடி மறைக்க முயலும் காவல்துறை : எல். முருகன் குற்றச்சாட்டு!
Apr 29, 2026, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆணவ படுகொலை வழக்கை மூடி மறைக்க முயலும் காவல்துறை : எல். முருகன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 திமுக அரசு தொடர்ந்து பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞர் கவின் என்பவர், கடந்த 27-ஆம் தேதி நெல்லை அருகே பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாகரீக சமூகத்தில் இதுபோன்ற ஆணவப் படுகொலை சம்பவம் நடைபெறுவது அனைவரையும் வெட்கி தலைகுனிய செய்கிறது.

சுர்ஜித் என்பவர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படவில்லை. சுர்ஜித்தின் பெற்றோர் இருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும், அவர்கள் கைது செய்யப்படவில்லை.

அவர்கள் இருவரும் காவல்துறை உதவி ஆய்வாளர்களாக உள்ள நிலையில் சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்க முடியும் எனக் கூறி, அரசு அறிவித்துள்ள நிதியை கூட வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடக்கம் முதலே தமிழக அரசும், காவல்துறையினரும் தகவல்களை மூடி முறைப்பதிலும், குற்றவாளிகளை காப்பாற்றுவதிலுமே குறியாக இருக்கின்றனர்.

தமிழகத்தில் பட்டியலின மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டியலின மக்கள் படும் துன்பம் ஒன்றல்ல… இரண்டல்ல… பட்டியலின மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் போக்குடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

பட்டியலின மக்கள் தொடர்புடைய அனைத்து வழக்குகளிலும் திமுக அரசு, ஓரவஞ்சனையுடன் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாகவே செயல்படுகிறது.

வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், இன்று வரை உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் புகார் கொடுத்த பட்டியலின மக்கள் மீதே திமுக அரசு வழக்கு பதிவு செய்து கொடுமை இழைத்தது.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் பட்டியலின மக்கள் பாதிக்கப்பட்டது தொடர்பான நூற்றுக்கணக்கான வழக்குகள் முறையாக விசாரிக்கப்படாமல் தூங்குகின்றன. காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இதுபற்றி எந்த அக்கறையும் இல்லை.

தமிழ்நாடு முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமை கொடுமை நிலவுவதாக ஓராண்டுக்கு முன்பு வெளியாகிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பல பகுதிகளில் தீண்டாமை கொடுமை, இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு, கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் தொடர்கிறது.

ஆனால் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. திமுகவின் திருட்டு திராவிட மாடல் ஆட்சியில் தான், உலகின் எந்த பகுதியிலும் காண முடியாத அளவுக்கு பட்டியலின மக்களுக்கு மாபெரும் சமூக அநீதி இழைக்கப்படுகிறது.

எனவே, கவின் ஆணவப் படுகொலை வழக்கில் தமிழக காவல் துறையினர் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று திமுக அரசை எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: எல். முருகன் குற்றச்சாட்டுதிமுக அரசுகாவல்துறைPolice trying to cover up honor killing case: L. Murugan alleges
ShareTweetSendShare
Previous Post

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க யாருமே முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு : அண்ணாமலை

Next Post

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

Related News

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies