தேசப் பிரிவினை கொடூரங்கள் : 8 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?
Sep 12, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 8 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 06:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுதந்திரம் கிடைக்க இன்னும் ஆறு நாட்களே மிச்சமிருந்த நிலையில் ஹைதராபாத்தில் ரஜாக்கர்களின் வன்முறை வெறியாட்டம் நடந்து கொண்டிருந்தது. தேசப் பிரிவினையில் நடத்தச் சம்பவங்கள் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

முஸ்லீம்களுக்கு அவர்கள் கேட்டப்படி, தனிநாடு கொடுக்கப் பட்டுள்ளது. அவர்கள் ஏன் இந்துக்களைத் தாக்கப் போகிறார்கள் ? ஏன் இப்படி இந்துக்கள் பயந்து சாகிறார்கள்? என யோசித்த காந்தி, தனது மீதி காலத்தைப் பாகிஸ்தானைச் செலவழிக்கப் போகிறேன் என்ற சிந்தனையில்  பாட்னா வந்து சேர்ந்தார்.

அங்கு மாணவர்களுடன் உரையாடினார் காந்தி. தேசப் பிரிவினையில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீதான முஸ்லீம்கள் நடத்தும் வன்முறைகள் பற்றி காந்தி பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சுதந்திர தினத்தை ராட்டை சுற்றிக் கொண்டாடுங்கள் என்றும், கல்லூரிகளைச் சுத்தம் செய்யுங்கள் என்றும் கூறிய காந்தி, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையரின் அராஜகம் அதிகரித்துள்ளதைச் சர்வதேச அளவில் எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

லண்டனில் வசிக்கும் சீக்கியர்கள், ஒரு குருத்துவாரில்  ஒன்று கூடி, பாகிஸ்தானில் சீக்கியர்களுக்கு நடக்கும் கொடுமைகளைத் தடுப்பது எப்படி? என்று ஆலோசனை செய்தனர். சீக்கியர்கள் காப்பாற்றப் படவேண்டும் என்றால், ஒட்டுமொத்த பஞ்சாபும் இந்தியாவுடன் சேரவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தைக் கோரிக்கையாகப்  பிரிட்டன் பிரதமர் அட்லீயிடம் சமர்ப்பிக்க முடிவெடுத்தனர்.

இதற்கிடையே, ஹைதராபாத் நிஜாம் இந்தியாவுடன் இணைய மறுத்து விட்டதால், அவரது கையாட்கள்  உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்து மாணவர்களை மிரட்டினார்கள். தங்களைத் தாக்க ஆயுதங்களுடன் முஸ்லீம் மாணவர்கள் இருப்பதை அறிந்த இந்து மாணவர்கள் 300 பேர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார்கள்.

இந்து மாணவர்கள் தப்பியதால், நிஜாமின் கையாட்களான ரஜாக்கர்கள், இந்துக்கள் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்துக்களின் வீடுகள்,கடைகள்,என இந்துக்களின் உடைமைகள் அனைத்தும் அடித்து நொறுக்கப் பட்டது. கண்ணில் படும் இந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல்கள் நடத்தப் பட்டன. ஹைதராபாத்தில் முஸ்லீம்களால் தாங்கள் சந்தித்து வரும் கொடுமைகளைப் பட்டியலிட்டு, நேருவுக்கும், மவுண்ட்பேட்டனுக்கும் தந்தி அனுப்பினார்கள் அங்கிருக்கும் இந்துக்கள்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் விதர்பா என்னும் தனி மாநிலம் கேட்டு வந்தனர். இருந்தாலும் ஒருங்கிணைந்த மகாராஷ்டிரம் வேண்டும் என்பதில்  பெரும்பாலான மராட்டியத் தலைவர்கள்  உறுதியாக நின்றனர். ஏற்கெனவே  பாகிஸ்தானுடன் ஜோத் பூரை சேர்க்க,பல வாக்குறுதிகளை ஜின்னா அள்ளிக் கொடுத்திருந்தார். ஆனால் அவையெல்லாம் பொய் புரட்டு என உணர்ந்த ஜோத்பூர் அரசர், இந்தியாவுடன் இணையச் சம்மதம் தெரிவித்தார்.

Tags: தேசப் பிரிவினை கொடூரங்கள்ஆகஸ்ட் 194777th independance dayThe horrors of partition: What happened on 8 August 1947?
Share
Tweet
SendShare
Previous Post

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

Next Post

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் – அமெரிக்க வரி விவகாரம் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies