ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!
Sep 12, 2026, 10:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் ஹூண்டாய் தொழிற்சாலையில், பணிபுரிந்த தென்கொரிய நாட்டைச் சேர்ந்த 300 பேர் உட்பட 475 பேரை ட்ரம்ப் அரசு கைது செய்துள்ளது. அவர்கள் கை,கால்களில் விலங்கிடப்பட்ட புகைப்படங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இரண்டாவது முறை அதிபராகப் பதவியேற்ற முதல்நாளிலே தெற்கு எல்லைப் பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை உடனடியாகத் தொடங்கப்பட்டது. சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது செய்யப்பட்டு, அந்தந்த நாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கானோர் சட்​ட​விரோத​மாகப் பணி​யா​ற்றி வந்துள்ளனர்.

இதையடுத்து, அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த 450-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் 300 ஊழியர்கள் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

​​நூற்றுக்கணக்கான கொரிய தொழிலாளர்கள் குற்றவாளிகளைப் போல கணுக்கால், மணிக்கட்டு மற்றும் இடுப்பில் விலங்கிடப்பட்டிருப்பதைக் காட்டும் வீடியோக்களும் புகைப்படங்களும் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோக்கள் கொரியாவில் மட்டுமல்ல, ஜப்பான், தைவான் என அமெரிக்காவில் பெரிய முதலீடுகள் செய்துள்ள நாடுகளிலும் வைரலாகி உள்ளன. தொழிலாளர்களை மீட்க அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் இறுதி செய்யப் பட்டுள்ளதாகவும், பத்திரமாகத் தாய் நாடு திரும்ப தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.

விசிட்டர் விசாக்களை மோசடியாகப் பயன்படுத்துவதாகவும், B -1 எனப்படும் விசா காலம் முடிந்த சட்ட விரோதமாகத் தங்கி இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் தொழில் தொடங்கும் பிறநாட்டு நிறுவனங்களுக்கு, அமெரிக்காவின் விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை இந்த நடவடிக்கை உதவும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் (Kristi Noem) கிறிஸ்டி நோயம் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களை  கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களைக் காப்பாற்ற சட்ட ஆலோசனையில் இறங்கி உள்ளன.

ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, மிகவும் வித்தியாசமாகவும் கணிக்க முடியாததாகவும் செயல்படுகிறது என்று சர்வதேச வணிக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Trumpdonald trump 2025South Korea protests Trump: Hyundai workers face violenceஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கைகால்களில் விலங்கு
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Next Post

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies