தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை!
Apr 29, 2026, 12:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 12, 2025, 06:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

இதே போல விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நீர்மட்டம் உயரும் என்பதால் ஆடி பட்டத்தில் விதை விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்களும் நிம்மதி அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், காந்தல், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

இதேபோல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பள்ளிபாளையம், ஆவரங்காடு, கண்டிப்புதூர், ஓடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அய்யர்மலை, தோகைமலை, மாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் போடியகவுண்டன்பட்டி கிராமத்தில் கனமழையின்போது மின் கம்பி அறுந்து விழுந்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags: weather updatelow pressurerain warningChennai metro logical deptvadipatty rainooty raimtamilnadu rainimdheavy rainrain alert
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

Next Post

ஓசூரில் முதல்வர் விழா – போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies