லடாக் வன்முறை பின்னணியில் சோனம் வாங்சுக் : ஆத்திரமூட்டும் பேச்சுகள் எதற்காக?
Jul 24, 2026, 06:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

லடாக் வன்முறை பின்னணியில் சோனம் வாங்சுக் : ஆத்திரமூட்டும் பேச்சுகள் எதற்காக?

Murugesan M by Murugesan M
Sep 27, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லடாக்கில், மாநில அந்தஸ்து கேட்டு, Leh Apex Body சார்பில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. 4 பேர் உயிரிழந்தனர். 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறைக்குப் பின்னணி என்ன? இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் யார் ? அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சீனா மற்றும் பாகிஸ்தானின் எல்லையில் இமயமலை சாரலில் அமைந்துள்ள லடாக், மக்கள்தொகை அளவில் இந்தியாவின் மிகச்சிறிய பிரதேசங்களில் ஒன்றாகும். சுமார் 59 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட லடாக்கில் லே மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் உள்ளன. லேவில் பௌத்த சமயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அதே நேரத்தில் கார்கிலில் பெரும்பான்மையாக ஷியா முஸ்லிம்கள் உள்ளனர்.

கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் வாழும் லடாக்கில் 97 சதவீதம் பேர் பழங்குடியினர். கடந்த 2019ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது அரசியல் அமைப்பு சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில் லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கேட்டுப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2023ம் ஆண்டு டிசம்பரில் Leh Apex Body மற்றும் கார்கில் ஜனநாயக கூட்டணியுடன் லே உயர் அதிகாரக் குழு நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. இதில், எந்த முடிவும் எட்டப்படாததால், இரு அமைப்புகளும் “லே சலோ” போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தன.

டெல்லியை நோக்கிய நடைப்பயணப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்திய அரசு, சோனம் வாங்சுக்-ஐ கைது செய்து கடந்த அக்டோபரில் விடுதலை செய்தது. ஒரு பொறியியலாளரான சோனம் வாங்சுக், 15C வெப்பநிலையைப் பராமரிக்கும் குறைந்த விலை மண் வீடு, விவசாயிகளுக்குத் தண்ணீர் தேவைக்கான கீழ்நிலை நீரை சேமிக்கும் பனி ஸ்தூபியின் வடிவத்தில் ஒரு செயற்கை நீரூற்று ஆகியவை இவரின் சில கண்டுபிடிப்புக்கள் ஆகும். ரமோன் மகசேசே விருது பெற்ற சோனம் வாங்சுக் கதாபாத்திரத்தில் தான், 2009ம் ஆண்டு, வெளியான பாலிவுட் திரைப்படமான 3 இடியட்ஸில் அமிர் கான் நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் வெளியானதும் தேசிய அளவில் புகழ் பெற்றார்.

ஏற்கெனவே, இப்பகுதியின் பூர்வீக பழங்குடி கலாச்சாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி 21 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தைச் சோனம் வாங்சுக் நடத்தினார். தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, LAB மற்றும் கார்கில் ஜனநாயக கூட்டணி உடன் லடாக் தொடர்பான உயர்மட்ட அதிகாரக் குழு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி, பேச்சுவார்த்தை நடத்தும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பை ஏற்க மறுத்த சோனம் வாங்சுக், கடந்த 10 தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். இதனையடுத்து, LAB அமைப்பின் இளைஞர் பிரிவு மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. லே அரசு நிர்வாகம், போராட்டத்துக்குத் தடையுத்தரவு பிறப்பித்தது. இந்தத் தடை உத்தரவை மீறி ஏராளமானோர் கடந்த புதன்கிழமை கண்டனப் பேரணி நடத்தினார்கள்.

பேரணியில் கலந்து கொண்டவர்களில் சிலர், லே பாஜக அலுவலகம் மற்றும் லே நிர்வாக அலுவலகம் மீது கற்களை வீசியும், வாகனங்கள் மற்றும் அலுவலகங்களுக்குத் தீவைத்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது ஜென்-Z புரட்சி என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள் என்றும் சோனம் வாங்சுக் கூறியுள்ளார்.

ஆனால் லடாக்கில் வெடித்த வன்முறைக்கு, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், லே உச்சநிலை அமைப்பு, காா்கில் ஜனநாயக கூட்டணி ஆகியவற்றுடன் மத்திய அரசுப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக, இந்தப் பேச்சுவாா்த்தையின் பலனாக, லடாக் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 45 சதவீதத்தில் இருந்து 84 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு, போதி மற்றும் புா்கி மொழிகள் அலுவல் மொழிகளாக அறிவிப்பு, 1,800 அரசுப் பணியிடங்களுக்கான ஆள்தோ்வு போன்வற்றை மத்திய அரசுசெய்திருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் உயா் அதிகார குழு மூலம் ஏற்பட்ட முன்னேற்றங்களைச் சிலல அரசியல் உள்நோக்கம் கொண்ட நபா்கள் விரும்பவில்லை என்றும், அவா்கள் பேச்சுவாா்த்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

பல தலைவர்கள் கேட்டுக்கொண்டபோதும், வாங்சுக் தனதுபோராட்டத்தைக் கைவிட மறுத்தார் என்றும், நேபாள போராட்டம் உள்ளிட்ட சில போராட்டங்களைக் குறிப்பிட்டு, பொதுமக்களை அவர் தூண்டிவிட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சம் கூறயுள்ளது.

வன்முறை நடந்த அதே சமயத்தில் உண்ணாவிரதத்தை கைவிட்ட வாங்சுக் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர் சென்றுவிட்டதாகவும், வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர, அவர் எந்தவித தீவிரமான முயற்சியையும் எடுக்கவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அதே நேரத்தில் அரசியல் சாசன பாதுகாப்பை வழங்கி, லடாக் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக ஊடகம் மற்றும் சமூக ஊடகத்தில் வெளியான பழைய மற்றும் ஆத்திரமூட்டும் காணொலிகளை யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

Tags: Sonam Wangchuk in the backdrop of Ladakh violence: Why the provocative speeches?லடாக் வன்முறைசோனம் வாங்சுக்Leh Apex Body
ShareTweetSendShare
Previous Post

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

Next Post

சென்னை ஆழ்வார்பேட்டை உணவகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

Related News

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies