பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

Murugesan M by Murugesan M
Sep 26, 2025, 09:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய வான்பரப்பை 63 ஆண்டுகளாகக் கட்டிக்காத்த மிக் 21 ரக போர் விமானங்களுக்கு ஓய்வு பெற்றது. நான்காம் தலைமுறை எஃப் 16 போர் விமானத்தை வீழ்த்திய பெருமைக்குரிய மிக் 21 ரக போர் விமானங்களுக்கு நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை கொடுத்தனர்.இதுபற்றிவிரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

இந்திய விமானப்படையில் 63 ஆண்டுகள் சேவையாற்றிய மிக் 21 ரக போர் விமானங்களுக்கு இன்று பிரியா விடை வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையில், ரபேல், சுகோய், மிக், மிராஜ், தேஜஸ் போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட மிக் 21 ரக போர் விமானங்கள், 60 ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் முக்கிய பங்காற்றி வந்தன.

நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட போர் விமானங்களுக்கு இந்திய விமானப்படை மாறுவதை முன்னிட்டு, பழைய விமானங்களுக்கு ஓய்வு தர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சண்டிகரில் மிக் 21 ரக போர்விமானங்களுக்குப் பிரியா விடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது மிக் 21 ரக விமானங்கள் கடைசியாக ஒருமுறை வானில் பறந்ததை கண்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், வீரர்களும் நெகிழ்ச்சியடைந்தனர். ஆனால், மிக் 21 ரக விமானங்களுக்கு ஓய்வு அளிக்கும் காலம் இதுவல்ல என முன்னாள் விமானப்படை அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மிக் 21 ரக போர் விமானங்கள் பறக்கும் சவப்பெட்டி என்று கிண்டலாக அழைக்கப்படுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அடிக்கடி மிக் 21 ரக விமானங்கள் விபத்தில் சிக்கிக்கொள்வதற்கு, விமான ஓட்டிகள் போதிய பயிற்சி பெறாததே காரணம் என்றும், விமானத்தின்தரத்தைக் குறைகூறுவது சரியாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். 1965, 1971, 1999 போர்களில் மிக் 21 விமானங்கள்எதிரிகளுக்குச் சிம்மம சொப்பமனமாக விளங்கியதை சுட்டிக்காட்டியுள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகள், 2019-ம் ஆண்டில் கூடப் பாகிஸ்தானின் எஃப் 16 விமானம், மிக் 21 ரக விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளனர்.

நான்காம் தலைமுறை எஃப் 16 போர் விமானத்தை, பழமையான விமானத்கை கொண்டு வீழ்த்த முடிகிறதென்றால், விமான ஓட்டிகளின் திறன் அதில் முக்கிய பங்காற்றுவதாக அவர்கள் உதாரணம் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க, ஜெர்மன் விமானப்படையில் சேவையாற்றிய எஃப் 104 ரக போர் விமானங்கள், 170 பைலட்டுகளின் உயிரை காவு வாங்கியிருக்கிறது. அந்த விமானம் பறக்கும் சவப்பெட்டி என்று அழைக்கப்படுகிறதென்றால், அதில் நியாயம் இருக்கிறது. ஆனால், மிக் 21 ரக விமானங்களை அவ்வாறு அழைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என அவர்கள்திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.

21-ம் நூற்றாண்டில் குறைந்த அளவிலேயே விபத்து ஏற்படுத்தியுள்ள, மிக் 21 ரக விமானம் இன்னும் சிறிது காலம் இந்திய விமானப்படையில் சேவையாற்றி இருக்கலாம் என்றே அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Tags: மிக்-21 ரக போர் விமானங்கள்The MiG-21the guardian of the skiesbids farewell
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

Next Post

லடாக் வன்முறை பின்னணியில் சோனம் வாங்சுக் : ஆத்திரமூட்டும் பேச்சுகள் எதற்காக?

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies