உலகம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது : பிரதமர் மோடி
Jun 4, 2026, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலகம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Sep 25, 2025, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம புத்த நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் 5 நாட்கள் நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

அப்போது, கண்காட்சியில் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்துள்ள தொழில் முனைவோர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். சர்வதேச வர்த்தக கண்காட்சியில் 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சிப் முதல் கப்பல் வரை அனைத்து பொருட்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் 55 சதவீதம் உத்தரப்பிரதேசத்தில் தயாரிக்கப்படுகிறது என்றும், செமி கன்டக்டர் துறையிலும் இந்தியா வலிமையடைந்து வருகிறது எனவும் கூறினார்.

ரஷ்யாவுடன் இணைந்து ஏகே 203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலை உத்தரப்பிரதேசத்தில் நிறுவப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். உள்ளூர் வியாபாரிகள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை யுபிஐயைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர் எனக் கூறிய அவர், 2047க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஜிஎஸ்டி வரி குறைப்பால் நாட்டு மக்களின் வருமானம் மற்றும் சேமிப்பை உயர்த்தி உள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி மறுசீரமைப்பு தொடர்ந்து நடக்கும் எனத் தெரிவித்தார்.

Tags: பிரதமர் மோடிIndia's growth is impressive amidst the challenges facing the world: PM Modi
ShareTweetSendShare
Previous Post

கடலூர் : அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி!

Next Post

முகேஷ் அம்பானி இல்லத்தில் நடைபெற்ற நவராத்திரி விழா கொண்டாட்டம்!

Related News

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

நீட் தேர்வில் குளறுபடி ஏற்படுத்திய கல்வி மாஃபியா மீது கடும் நடவடிக்கை – தர்மேந்திர பிரதான் உறுதி!

திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு? – மம்தா கூட்டத்தை புறக்கணித்த 60 எம்எல்ஏக்கள்!

வணிக சிலிண்டர் விலை ரூ. 46 உயர்வு : வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies