சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் - தவெக தலைவர் விஜய்
Sep 14, 2026, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் – தவெக தலைவர் விஜய்

Murugesan M by Murugesan M
Sep 30, 2025, 05:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

CM சார் உங்களுக்கு ஏதாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் வீடியோ  வெளியிட்டுள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

என் வாழ்க்கையில் இது போன்ற வலியான தருணத்தை நான் சந்தித்ததே கிடையாது! மனது முகக்க வலி மட்டுமே.

இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னை பார்க்க வருகிறார்கள், அதற்கு ஒரே ஒரு காரணம் அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும் பாசமும் தான். அந்த அன்பிற்கும் பாசத்திற்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதனால் தான் இந்த சுற்றுப்பயணத்தில் எல்லா விஷயங்களையும் தாண்டி, மக்களுடைய பாதுகாப்பில் எந்த பாரபட்சமும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக தான், என் மனதிற்குள் ஆழமாக அதனை நினைத்து கொண்டிருப்பேன்.

அதனால்தான் இந்த அரசியல் காரணங்கள் எல்லாவற்றையும் தவிர்த்து ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களுடைய பாதுகாப்பை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, அதற்கான இடங்களை தேர்வு செய்வது, அதற்காக இடங்களில் அனுமதி வாங்குவது, காவல்துறையில் தயவு கூர்ந்து கேட்போம். “ஆனால் நடக்கக்கூடாது ஒன்று நடந்து விட்டது.”

நானும் மனிதன்தானே, அந்த நேரத்தில் அத்துனை பேர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் பொழுது அந்த ஊரை விட்டு எப்படி புறப்பட்டு என்னால் வர முடியும்?

நான் திரும்பவும் அங்கே செல்ல வேண்டும் என்ற சூழல் இருந்தால் அதனை காரணம் காட்டி, வேறு சில பதட்டமான சூழல்கள் மற்றும் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் அதனை தவிர்த்தேன்.

இந்த நேரத்தில் சொந்தங்களை இழந்து தவிக்கின்ற அத்தனை குடும்பங்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்! என்ன சொன்னாலும் இது ஈடு ஆகாது என்று எனக்குத் தெரியும்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரக்கூடிய அனைவரும் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறேன்!

“கூடிய விரைவில் உங்கள் எல்லோரையும் நான் சந்திக்கிறேன்.”

இந்த நேரத்தில் எங்களுடைய வலிகளை எங்களுடைய நிலைமையை புரிந்து கொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள் தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

“கிட்டத்தட்ட ஐந்து மாவட்டங்களுக்கு பிரச்சாரத்திற்கு சென்றிருக்கிறோம். எங்கேயும் இது போன்ற நடக்கவில்லை ஆனால் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?”

மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்!

மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!.

கரூரை சேர்ந்த மக்கள் உண்மைகள் எல்லாம் வெளியே சொல்லும் போது கடவுளே நேரில் வந்து உண்மைகளை எல்லாம் சொல்வது போல தோன்றியது.

சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும். எங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் நாங்கள் எங்கள் பரப்புரையை நிகழ்த்தினோம். மற்றபடி நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.

ஆனால் இருந்தாலும் எங்கள் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் தோழர்கள் மீது வழக்குப்பதிவு, அது மட்டும் இல்ல சமூக வலைத்தளத்தில் இருக்கும் நண்பர்கள் தோழர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய பட்டிருக்கிறது

“CM சார் உங்களுக்கு ஏதாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.”

“அவர்கள் மீது கை வைக்காதீர்கள்”

“நான் ஒன்று வீட்டில் இருப்பேன், அல்லது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ”

நண்பர்களே தோழர்களே நம்மளுடைய அரசியல் பயணம் இன்னும் பலமாக, தைரியத்துடன், தொடரும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

Tags: tvk vijaytvk vijay campaignAll the truth will come out soon - Thaweka leader Vijay
Share
Tweet
SendShare
Previous Post

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

Next Post

தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies