கட்சியிலும் ஆட்சியிலும் 'காலனி'யை அகற்ற மனமில்லாதவர்களால் எப்படி ஜாதி பெயரை நீக்க முடியும்? - எல்.முருகன் கேள்வி!
Jul 30, 2026, 10:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கட்சியிலும் ஆட்சியிலும் ‘காலனி’யை அகற்ற மனமில்லாதவர்களால் எப்படி ஜாதி பெயரை நீக்க முடியும்? – எல்.முருகன் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 10, 2025, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கட்சியிலும் ஆட்சியிலும் ‘காலனி’யை அகற்ற மனமில்லாதவர்களால் எப்படி ஜாதி பெயரை நீக்க முடியும்? என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது : ஆட்சிக்காலத்தின் இறுதியில் இருக்கும் திமுக, மக்களின் கடும் கோபத்தில் இருந்து தப்பிக்க மடைமாற்றும் அரசியல் வித்தையில் இறங்கி இருக்கிறது.

மாணவர் விடுதியின் பெயர் சமூகநீதி விடுதிகள், அரசு ஆவணங்களில் இருந்து காலனிபெயர் நீக்கம் என புரட்சி செய்வதாக தம்பட்டம் அடித்துக் காண்டது. வாய் ஜாலங்களில் வித்தகர்களான திமுகவினர் அறிவித்து வரும் வற்று விளம்பர அறிவிப்புகள் இவை என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆட்சியிலும் ஆட்சியிலும் காலனிகளை உருவாக்கி வைத்திருக்கிறாரே தலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை நீக்க என்ன நடவடிக்கை டுக்திருக்கிறார் என அப்போதே நான் கேள்வி எழுப்பினேன். பதில் சொல்ல முெகவினருக்கு திராணியில்லை.

கடந்த நான்கரை ஆண்டுகளாக பட்டியலின மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காடூரம் ஒன்றல்ல… இரண்டல்ல… ஓராயிரம்…
இந்த திருட்டு, ஏமாற்று, மோசடி திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் டும் துன்பங்கள் ஓராயிரம்.. எதற்கு தான் இதுவரை தீர்வு கிடைத்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர்தேக்க தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இன்று வரை அதற்கு விடை கிடைக்கவில்லை.

தமிழகத்தின் பலப்பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.
தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான காள தீண்டாமைக் கொடுமை நிலவுகிறது.தமிழ்நாட்டில் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் மனிதர்கள் வசிக்க தகுதியற்ற நிலையில் பட்டியலின மாணவர் விடுதியின் அவல நிலை இருக்கிறது. இதற்கு சமூகநீதி விடுதி என பெயர் சூட்டி விட்டால் போதுமா? உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு பட்டியலின மக்களுக்கு மாபெரும் சமூக அநீதி இழைக்கப்படுவது இந்த போலி திராவிட மாடல் ஆட்சியில் தான்.

இப்போது தமிழகத்தில் தெருக்கள், சாலைகளுக்கு ஜாதி பெயர் நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக புதிய புரட்டு வேலையை திமுக அரசு தொடங்கி இருக்கிறது. காலம் முழுவதும் ஜாதியத்தை வளர்த்து, மக்களுக்குள் மோதலை ஏற்படுத்தி குளிர் காய்ந்து வரும் திமுகவினருக்கு, ஆட்சி அஸ்தமனமாகப்போகும் நேரத்தில் ஏற்பட்டுள்ள ஜாதி பெயர் ஒழிப்பு ஞானோதயம் தமிழக மக்களை ஆச்சிரியமடைய வைக்கிறது.

திமுக அரசு வெளியிட்டுள்ள தெருக்கள், சாலைகளுக்கு வைக்கப்பட வேண்டிய மாற்றுப் பெயர்கள் பட்டியலை பார்த்தாலே இவர்களின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த பட்டியலில் தமிழகத்தில் த்தில் தமிழை தமிழை வளர்த்து பக்தி புரட்சியை ஏற்படுத்தி நாயன்மார்கள், ஆழ்வார்கள் பெயர் இல்லை என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: DMKminister l muruganMinister L. Murugan X postcaste name removal issuekarunanithi name issue
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் உயிரிழப்பு – போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies