நெல்லை தனியார் கல்லூரி மாணவர்களுக்கு எலி காய்ச்சல் - உணவு கூட சான்றிதழ் தற்காலிக ரத்து!
Sep 13, 2026, 12:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை தனியார் கல்லூரி மாணவர்களுக்கு எலி காய்ச்சல் – உணவு கூட சான்றிதழ் தற்காலிக ரத்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 10, 2025, 11:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் உணவுக் கூடத்துக்கான சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

நெல்லை திடியூர் பகுதியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் 7-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் ரத்த மாதிரிகள், குடிநீர் மாதிரிகளை சோதனை செய்ததில் விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவக்கூடிய ‘எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சுகாதாரமான முறையில் மாணவர்களுக்கு குடிநீர், உணவுகள் உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்யும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தினர் தேதி குறிப்பிடாமல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, தனியார் கல்லூரில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கல்லூரி வளாகம், உணவு பாதுகாப்பு கூடங்களில் உடனடியாக தூய்மை பணிகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில், தனியார் பொறியியல் கல்லூரியின் உணவுக் கூடத்துக்கான சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Tags: NellaiFood Safety Departmentrat fever for college studentsThidiyur
Share
Tweet
SendShare
Previous Post

மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் உயிரிழப்பு – போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு!

Next Post

மேலூர் அரிட்டாபட்டி மந்தை கருப்பண சுவாமி கோயிலை அறநிலையத்துறை அபகரிக்க முயற்சி – பக்தர்கள் குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies