பள்ளிபாளையம் அருகே சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து கோயிலை திறந்த திமுக நிர்வாகிகள்!
Aug 8, 2026, 02:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளிபாளையம் அருகே சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து கோயிலை திறந்த திமுக நிர்வாகிகள்!

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 04:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே நீண்ட காலமாகப் பூட்டப்பட்டிருந்த கோயிலை, திமுக நிர்வாகிகள், அறநிலையத்துறை அதிகாரிகளின் துணையுடன் திறந்த வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிபாளையம் அருகே தாஜ்நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு திருப்பதி கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் பணியை அர்ச்சகர்  பார்த்தசாரதி கவனித்து வந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தசாரதிக்கும், சிலருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக அர்ச்சகர் பார்த்தசாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முடிவில் கோயில் இடம் ஈரோடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமானது என்றும், கோயிலைப் பூட்டி `சீல்’ வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர்.

இந்நிலையில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் முன்னிலையில் திமுக நிர்வாகிகள், கோயிலை 2 ஆண்டுகளுக்குப் பிறகு திறந்து உள்ளே சென்று ஆய்வு நடத்தினர்.

இதனையடுத்து, தேர்தலுக்கு முன்பாகக் கோயிலை திறக்க வேண்டும் என்றும் இந்தப் பகுதியில் வாக்கு எண்ணிக்கையைச் சரி செய்து கொள்ள வேண்டும் என்றும் திமுக நிர்வாகிகள் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே திமுகவினர்  தன்னிச்சையாக அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கைகோர்த்து அரசியல் ஆதாயத்திற்காகத் தனிப்பட்ட முறையில் கோயிலைத் திறக்க முயற்சிப்பதாகக் கூறி, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகிகள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags: DMK executives opened a temple near Pallipalayam keeping the assembly elections in mind
Share
Tweet
SendShare
Previous Post

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் : தமிழகத்தைத் தலை குனிய வைத்திருக்கிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Next Post

அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லாத 7,248 லாரி ஓட்டுநர்கள் நீக்கம்!

Related News

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies