சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!
Jun 4, 2026, 04:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 14, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவை தொடர்ந்து சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் என்று வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸின் இந்திய எதிர்ப்பு கருத்துக்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தேசத்தின் இறையாண்மைக்கு எதிரான வெளிநாட்டு ஆதரவு பிரச்சாரங்களுக்கு எப்போதும் கடுமையான பதிலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உடனுக்குடன் கொடுத்து வருகிறது. வங்கதேசத்தில், மாணவர் போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக மாறி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஜனநாயக ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்த நிலையில், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து, யூனுஸ் இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வார்த்தைகளை முன்வைத்து வருகிறார். வங்க தேசத்தில் ஒரு அடிப்படைவாத இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்கான சதி நடக்கிறது என்று வங்கதேச சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. குறிப்பாக, ஜமாத் மற்றும் ஹெஃபாசத்-இ-இஸ்லாம் போன்ற அமைப்புகளின் ஒரே ஒரு கோரிக்கையாகக் கஸ்வதுல் ஹிந்த் அதாவது முஸ்லீம் அல்லாதவர்களுக்கு எதிரான போர் மட்டுமே உள்ளது.

அதன் நீட்சியாக ‘இஸ்லாமிய வங்காளதேசத்தை உருவாக்கவும் திட்டமிட்டு வருவதாகவும் அந்நாட்டின் இடைக்கால அரசின் ஆலோசகர் யூனுஸும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், பாகிஸ்தானின் கூட்டுப் பணியாளர்கள் குழுவின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சாவுக்கும், ​​மெஹ்மத் அகீஃப் யில்மாஸ் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட துருக்கி நாடாளுமன்றக் குழுவினருக்கும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை உள்ளடக்கிய சர்ச்சைக்குரிய ‘கிரேட்டர் பங்களாதேஷ்’ வரைப்படத்தைப்பரிசாகக் கொடுத்து முகமது யூனுஸ் புயலைக் கிளப்பினார்.

இந்தச் சூழலில், டாக்கா பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு வரலாற்று கண்காட்சியின் போது, ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசத்தின் ஒருபகுதியாகக் காட்டும் ‘கிரேட்டர் பங்களாதேஷ்’ என்ற சர்ச்சைக்குரிய வரைபடங்கள் பல்கலைக்கழக வளாகச் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தன.

டாக்காவில் உள்ள ‘சல்தானத்-இ-பங்களா’ என்ற இஸ்லாமியக் குழு, ‘துருக்கி இளைஞர் கூட்டமைப்பு’ என்ற துருக்கியின் தன்னார்வ அமைப்பின் ஆதரவுடன், இல்லாத ‘கிரேட்டர் பங்களாதேஷ்’ என்ற ஒரு வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். துருக்கி இளைஞர் கூட்டமைப்பு, மனிதாபிமான உதவிகளைச்செய்வதாகக் கூறினாலும், அடிப்படைவாத இஸ்லாமிய கருத்துக்களைஇளைஞர்களிடையே பரப்பி வருவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, இஸ்லாமிய தீவிரவாத நெட்வொர்க்கில் இணைந்துசெயல்பட்டுவருவதாகச் சர்வதேச அளவில் விசாரணைகள் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் ‘நிலத்தால் சூழப்பட்ட’ வடகிழக்கு மாநிலங்களில், சீனா தனது பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்தத் தங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என வங்கதேசம் கூறியது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் அதன் பிரதான நிலப்பகுதிக்கும் இடையிலான இணைப்பான ‘சிக்கன்ஸ் நெக்’ வழித்தடத்துக்கு அருகில், வங்கதேசத்தில் ஒரு விமான ஓடுபாதையை கட்டுவதற்கு சீனாவுக்கு அனுமதி அளித்தது, சிக்கன்ஸ் நெக் அருகில் உள்ள நதி பாதுகாப்பு திட்டத்தில் பங்கேற்க சீனாவையும் அழைத்தது என இந்தியாவுக்கு எதிரான கருத்துகளையே யூனுஸ் தெரிவித்து வருகிறார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா யாரையும் சீண்டுவதில்லை, ஆனால் யாராவது இந்தியாவைச் சீண்டினால், அவர்களைச் சும்மா விடமாட்டோம் என்று எச்சரித்திருந்தார்.

மேலும் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிக்கும் யூனுஸ் தனது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதில் இந்தியா உறுதியாக இருந்தாலும், இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு சவாலுக்கும் உறுதியான பதில் அளிக்கப்படும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த வங்க தேசத்தின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மஹ்புபுல் ஆலம், இந்தியாவுடன் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுக்கு நாடு உறுதிபூண்டுள்ளதாகவும், இறையாண்மை சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கைRajnath SinghBangaladeshYou will be scattered by hissing: Rajnath Singh warns Yunuswho is waving his tail
ShareTweetSendShare
Previous Post

அல் ஃபலா பல்கலை. நிறுவனர் மோசடி வழக்கில் திகார் சிறை சென்றவர் : டெல்லி தீவிரவாத தாக்குதலில் அதிர வைக்கும் பின்னணி!

Next Post

பீகாரில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

Related News

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

அந்த நிறுவனத்தை நம்பியதால் மோசம் – கள ஆய்வில் குமுறிய திமுக தொண்டர்கள் – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வில் குளறுபடி ஏற்படுத்திய கல்வி மாஃபியா மீது கடும் நடவடிக்கை – தர்மேந்திர பிரதான் உறுதி!

திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு? – மம்தா கூட்டத்தை புறக்கணித்த 60 எம்எல்ஏக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies