பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!
Jul 29, 2026, 07:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 12, 2025, 09:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் ரிசின் என்ற சக்திவாய்ந்த விஷத்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொலை செய்யப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

டெல்லியில் அண்மையில் நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் பின்னணியும், அவர்கள் இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் திட்டங்களும் அனைவரும் மேலும் அதிர்ச்சியில் உறைய செய்பவையாக உள்ளன.

குறிப்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயிரியல் தாக்குதல் நடத்துவது அவர்களின் முக்கிய திட்டமாக இருந்துள்ளது. ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தாமலும், நேரடியாகத் தாக்குதலில் ஈடுபடாமலும் இந்த உயிரியல் தாக்குதலை நடத்த முடியும். இந்த உயிரியல் தாக்குதலை நடத்த ரிசின் என்ற சக்திவாய்ந்த விஷத்தைத் தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். உணவு மற்றும் குடிநீரில் இந்த விஷத்தைக் கலந்துவிட்டால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்களை கொல்ல முடியும்.

அதிக மக்களை கொல்ல வேண்டும் என்றால் அதிகளவில் ரிசின் விஷம் தேவைப்படும். எனவே, அதனைத் தயாரிப்பதற்கான பணி மருத்துவரும், பயங்கரவாதியுமான அகமது மொஹியுதீன் சையத் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டையே ஆய்வகமாக மாற்றிய அவர், இரவு பகலாக ரிசின் விஷத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். உத்தரபிரதேசம் மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்த ஆசாத் சுலேமான் ஷேக் மற்றும் முகமது சுஹைல் சலீம் கான் ஆகிய இருவர் இவருக்கு உதவியாக இருந்துள்ளனர்.

உலகளவில் கடுமையான விஷமாகக் கருதப்படும் ரிசின் ஆமணக்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அடிப்படையில் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட விதைதான் ஆமணக்கு. விளக்கெண்ணெய், உரங்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கவும், பொடுகு, தோல் நோய்களுக்கான மருந்துகளை உருவாக்கவும் இந்த ஆமணக்கு விதை பயன்படுகிறது. இப்படி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இதே ஆமணக்கு விதைகளில் இருந்துதான், ஆகப்பெரும் நச்சுத்தன்மை வாய்ந்த ரிசின் என்ற ராசாயனமும் தயாரிக்கப்படுகிறது. 1888ம் ஆண்டு ஜெர்மனி நாட்டை சேர்ந்த பீட்டர் ஹெர்மன் ஸ்டில்மார்க் என்பவர்தான், முதன்முதலில் ரிசின் நச்சுப்பொருளை கண்டுபிடித்தார்.

அன்று முதல் இன்று வரை இதனை கொண்டு உலகம் முழுவதும் பல கொலைகள் நடைபெற்றுள்ளன. ஒருவர் ரிசினை உட்கொண்ட சில மணிநேரங்களுக்குள் உடல் எதிர்வினையாற்ற தொடங்கும். காயச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலி, குமட்டல், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் அடுத்தடுத்து ஏற்பட ஆரம்பிக்கும். குறிப்பாக நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு, சுவாசிப்பதில் கடுமையான சிரமம் ஏற்படும்.

சமயங்களில் தோலின் நிறம் நீலமாக மாறக்கூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சிலர் மாயத்தோற்றங்கள் தென்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் எனவும், சீறுநீரில் ரத்தம் வெளியேறுதல், வலிப்பு போன்ற பாதிப்புகளையும் ரிசின் விஷம் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்படாவிட்டால், ஒவ்வொரு உறுப்பாகச் செயலிழக்க தொடங்கும். குறிப்பாக, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் சேதமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசின் விஷத்தை முறிக்கும் மருந்தோ, தடுப்பூசியோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், குறிப்பிட்ட சில சிகிச்சைகளை வழங்குவதன் மூலம், நோயாளிகளைக் காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

இப்படிப்பட்ட ரிசின் விஷத்தை குடிநீர், கோயில் பிரசாதங்கள் உள்ளிட்டவற்றில் கலந்து, மக்களின் உயிரை பறிக்க, அகமது மொஹியுதீன் உள்ளிட்ட 3 பேரும் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் முளையிலேயே முறியடிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான உயிர்கள் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளன.

Tags: Indianewstoday newsPlan to kill by mixing poison in offerings: Terrorists' MASTER PLAN foiledபயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு
ShareTweetSendShare
Previous Post

டெல்லி சம்பவம் தவியாய் தவிக்கும் குடும்பங்கள் : கண்ணீரில் உழலும் உறவுகள் – பெருந்துயர் நீங்குமா?

Next Post

டெல்லி கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவம் – மத்திய அரசு அறிவிப்பு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies