இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ் : சீனாவின் எதிரி நாடுகளுக்கு இனி இந்தியாவே பாதுகாப்பு!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ் : சீனாவின் எதிரி நாடுகளுக்கு இனி இந்தியாவே பாதுகாப்பு!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 09:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணையை வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இந்தோனேசியா ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் பிரம்மோஸை பெறும் முதல் இஸ்லாமிய நாடு என்ற சிறப்பையும் இந்தோனேஷியா பெறும். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

டெல்லியில் நடந்த 3வது இந்திய- இந்தோனேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்தோனேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜாப்ரி ஜம்சோடின், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் மூலம் 3750 கோடி ரூபாய் மதிப்பிலான பிரமோஸ் ஏவுகணையை வாங்குவது குறித்து ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், பிலிப்பைன்ஸுக்குஅடுத்தபடியாகப் பிரமோஸ் ஏவுணையை வாங்கும் இரண்டாவது நாடு மற்றும் முதல் முஸ்லீம் நாடு என்ற பெருமையை இந்தோனேசியா பெறும். முன்னதாக 75 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் இந்தியாவின் 76வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்ட இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் திறனைப் பாராட்டியிருந்தார்.

மேலும் பிரதமர் மோடியைச் சந்தித்து, பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு ஆதரவளிக்கும் படி கேட்டுக் கொண்டார். அப்போது அதிபருடன் இந்தியாவுக்கு வந்திருந்த ​​அந்நாட்டின் தலைமைத் தளபதி அட்மிரல் முகமது அலி தலைமையிலான உயர்மட்டக் குழு, பிரம்மோஸ் உற்பத்தி ஆலையைப் பார்வையிட்டது.

இந்தோனேசியாவின் சுகோய் போர் விமானங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்படும் என்றும், இதற்கான கடன் உதவியையும் இந்தியாவே வழங்கும் என்றும் இந்தோனேசியாவின் விமானப்படை மற்றும் கடற்படையை மேம்படுத்தவும் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு வசதிகளை இந்தியாவே உருவாக்கிக் கொடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றான பிரமோஸ், ஒலியை விட 3 மடங்கு அதிகமான வேகத்தில் சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும். பிரமோஸ் ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழிப்பது என்பது நடக்காத காரியம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூரில் பிரமோஸ் ஏவுகணை தாக்குதல்களால் அந்நாடு நிலைகுலைந்து போனது. பாகிஸ்தானின் 10க்கும் மேற்பட்ட விமானப் படைத்தளங்கள் சிதறடிக்கப்பட்டன. ஆப்ரேஷன் சிந்தூரில் பிரமோஸ் ஏவுகணையின் ஆற்றலைக் கண்டு வியந்த உலகநாடுகள் பிரமோஸ் ஏவுகணையை வாங்குவதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம், சிங்கப்பூர், புரூனை, எகிப்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஒமான், பிரேசில், சிலி, அர்ஜென்டினா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்தியாவிடம் பிரமோஸ் ஏவுகணையை வாங்கிய முதல் நாடாக பிலிப்பைன்ஸ் உள்ளது. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸ் கடற்படையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் இணைக்கப் பட்டுள்ளன. சீனாவை குறிவைத்து 4 இடங்களில் பிலிப்பைன்ஸ் கடற்படை பிரம்மோஸ் ஏவுகணைகளை நிறுவியுள்ளது. இப்போது உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவும் பிரமோஸை கொள்முதல் செய்ய உள்ளது.

சீனாவின் அச்சறுத்தலுக்கு எதிராக இந்தோனேசியாவும் சுமத்ரா, ஜாவா, போர்னியோ மற்றும் சுலவேசி ஆகிய பெரிய தீவுகளில் பிரம்மோஸ் ஏவுகணைகளை நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பிரம்மோஸை ஏற்றுமதி செய்வது அந்நாடுகளின் பாதுகாப்புத் திறன்களை அதிகரிப்பது, பல்வேறு ராணுவத் கூட்டு வசதிகளை நிறுவுவது மட்டுமில்லாமல் அந்நாடுகளுடன் இந்தியாவின் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ்இந்தியாவே பாதுகாப்புபாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்indian armyசீனாBrahmos for Indonesia: India will now be the security for China's enemy countries
Share
Tweet
SendShare
Previous Post

இலங்கையை புரட்டிப்போட்ட “டிட்வா” புயல் : வரலாறு காணாத மழை – மீட்பு பணிக்கு கைகொடுக்கும் இந்திய கடற்படை!

Next Post

430 கி.மீ தொலைவில் டிட்வா புயல் – சென்னையில் தொடங்கியது மழை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies