உயிர் பயத்தில் சுற்றுலா பயணிகள் - மரண பயம் காட்டும் வொண்டர்லா!
Jul 29, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயிர் பயத்தில் சுற்றுலா பயணிகள் – மரண பயம் காட்டும் வொண்டர்லா!

Murugesan M by Murugesan M
Dec 3, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அருகே 611 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட தனியார் பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லாவில் பல்வேறு ரைடுகள் பழுதாகிநின்றிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. திறக்கப்பட்ட முதல்நாளிலேயே அடுத்தடுத்து பழுதாகி நிற்கும் ரைடுகளால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தியாவின் பிரபலமான பொழுதுபோக்கு பூங்காங்களில் ஒன்றான வொண்டர்லா, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், புவனேஷ்வர் ஆகிய நகரங்களை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தனது பொழுதுபோக்கு பூங்காவை கடந்த இரண்டாம் தேதி திறந்தது. 64 ஏக்கர் பரப்பளவில் 611 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த பொழுதுபூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த இரண்டாம் தேதி திறந்து வைத்தார்.

பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே பல ரைடுகள் பாதியிலேயே நின்றதால் ஆர்வத்துடன் வந்த பயணிகள் அனைவரும் மிகுந்த அதிருப்திக்குள்ளாகினர். இந்தியாவிலேயே முதன்முறையாக தலைகீழாக தொங்கி பயணிக்கும் ரோலர் கோஸ்டரான தஞ்சோரா ரோலர் கோஸ்டர், இந்தியாவின் உயரமான ரைடரான ஸ்பின் மில், பூங்காவின் முப்பரிமாண காட்சியை வழங்கும் ஸ்கை ரயில் என உலகத்தரம் வாய்ந்த 43 பிரம்மாண்ட ரைடுகளுடன் உருவாக்கியிருப்பதாக வொண்டர்லாவின் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், முதல்நாளிலேயே பல ரைடுகள் பழுதாகி வொண்டர்லாவின் அரைகுறை வேலைகள் அம்பலமாகியுள்ளன.

உயரத்தில் பறந்து கொண்டிருந்த ரைடுகள் திடீரென செயலிழந்து பாதியில் நின்றதால் அதில் பயணித்த பயணிகளின் வொண்டர்லா நிறுவன ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரகாலமாக இந்தியாவிலேயே முதன்முறையாக என விளம்பரம் செய்யப்பட்ட வொண்டர்லா திறக்கப்பட்ட முதல் நாளிலேயே செயலிழந்திருப்பது பொதுமக்களின் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அடிப்படையான இயந்திர பாதுகாப்பு கூட இல்லாமல் அவசரகதியில் திறக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பும் பொதுமக்கள், பாதுகாப்பு மற்றும் தர சோதனைகள் இல்லாமலேயே திறக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளனர்.

இன்னமும் சில ரைடுகளுக்கான கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தது ஏன் என்ற கேள்வியும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெற்ற தொழில்நுட்ப கோளாறு மின் தடையால் மட்டுமே ஏற்பட்டதாகவும், சிலர் சந்தித்த சிரமங்களுக்காக தங்களின் வருத்தத்தை பதிவு செய்துகொள்வதாகவும் வொண்டர்லாவின் நிறுவனத் தலைவர் அருண் சிட்டிலப்பிள்ளை விளக்கமளித்துள்ளார்.

பொதுமக்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கப் போகிறோம் என திறக்கப்பட்ட வொண்டர்லா அவர்களுக்கு உயிர்பயத்தை கண்முன்னே காட்டியிருக்கிறது. பிரம்மாண்டம் என்பதை தாண்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாவிடில் பொழுதுபோக்கிற்காக தொடங்கப்பட்ட இந்த பூங்கா பொதுமக்களின் உயிரை எடுக்கும் பூங்காவாக மாறிவிடும் என்ற எச்சரிக்கையை வொண்டர்லா உணர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Tags: வொண்டர்லாஉயிர் பயத்தில் சுற்றுலா பயணிகள்wonderlaMK StalinTn newstn news todayTourists in fear for their lives - Wonderla shows fear of death
ShareTweetSendShare
Previous Post

முனீருடன் மோதும் ஷெபாஸ் ஷெரீப்? : முப்படைகள் தளபதி நியமன அறிவிப்பி குழப்பம்!

Next Post

F-35 க்கு சவால் விடும் ஆளில்லா விமானம் – முடிந்ததா போர் விமான சகாப்தம்?

Related News

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies