சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
Sep 14, 2026, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 18, 2025, 07:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, விசாரணைக்கு மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரிலும், தலைமைச் செயலாளர் காணொலி வாயிலாகவும் ஆஜராகினர்.

அப்போது, தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக இரு நீதிபதிகள் அமர்வில் அவதூறாக பேசியது ஏன்? என வழக்கறிஞர் விகாஸ் சிங்கிடம் நீதிபதி சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.

பின்னர், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என்ற கேள்விக்கு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை இருப்பதாகக் கூறிய தலைமைச் செயலாளரிடம் குறுக்கிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது எனக் கூறினார்.

மேலும், திண்டுக்கல், கன்னியாகுமரி வழக்குகளிலும் தனது உத்தரவுகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை சுட்டுக்காட்டிய நீதிபதி, தலைமைச் செயலரின் கோரிக்கையை ஏற்று பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம் வழங்கினார்.

மேலும், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், கோவில் நிர்வாக அதிகாரி என அனைவரும் ஜனவரி 9ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.

Tags: Thiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowjudge saminathanMadurai high courtThiruparankundramThiruparankundram hillThiruparankundram issue
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு : 5-வது நாளாக நடைபெறும் விசாரணை!

Next Post

ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்க வேண்டும் என்றால், அந்த பதவி தேவையில்லை – அண்ணாமலை

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies