மீண்டும் வர்த்தக பாதையாகிறதா பெட்ரா நகரம்?
Aug 24, 2026, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

மீண்டும் வர்த்தக பாதையாகிறதா பெட்ரா நகரம்?

Murugesan M by Murugesan M
Dec 24, 2025, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜோர்டானில் உள்ள பெட்ரா நகரை வர்த்தக பாதையை மீண்டும் மாற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அதற்கு என்ன காரணம்? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அண்மையில் ஜோர்டான் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, புவியியலை வாய்ப்பாகவும், அந்த வாய்ப்பை வளர்ச்சியாகவும் எப்படி மாற்றுவது என்பது குறித்து ஜோர்டான் மன்னருடன் விவாதித்ததாகத் தெரிவித்தார். அத்துடன், ஜோர்டானில் உள்ள பெட்ரா நகரம் வழியாக இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு நீண்ட காலம் வர்த்தகம் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் பாதையை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், இந்தியா பெட்ரா நகரம் வழியாக ஐரோப்பாவுடன் மீண்டும் வர்த்தகத்தைத் தொடர முடியுமா என்பது குறித்து பலரும் விவாதிக்க தொடங்கியுள்ளனர். ஜோர்டான் தலைநகர் அம்மானில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பகுதிதான் பெட்ரா. சவுதி அரேபியா, எகிப்து, சிரியா மற்றும் மத்திய தரைக்கடலை இணைக்கும் முக்கியமான வர்த்தக பாதையில் இந்நகரம் அமைந்துள்ளது. கி.மு 4ம் நூற்றாண்டில் பெட்ரா நகரம், உலகளவில் முக்கியமான வர்த்தக மையமாகத் திகழ்ந்தது. பெட்ரா என்றால் பாறை என்று அர்த்தம்.

பெரும்பாலும் பறைகளில் இருந்து செதுக்கப்பட்ட கட்டங்களை கொண்டிருந்ததால், இந்த நகரம் இந்த பெயரை பெற்றது. கிழக்காசிய நாடுகளில் இருந்தும், ஆப்பிரிக்காவில் இருந்தும் ஐரோப்பாவிற்கு பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்றால், பெரும்பாலும் பெட்ரா நகர் வழியாகத்தான் சென்றாக வேண்டும். அரேபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வாசனை திரவியங்களும், சீனாவில் இருந்து பட்டு உள்ளிட்ட பொருட்களும் இந்த நகர் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவில் இருந்து மசாலா பொருட்கள், தேயிலை, பருத்தி ஆடைகள், நகைகள், வைரங்கள் உள்ளிட்டவை பெட்ரா நகரை கடந்து ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்பட்டன.

பெரும்பாலும் குஜராத்தில் இருந்து இந்த பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடல் வணிகம் கோலோச்ச தொடங்குவதற்கு முன்பு வரை, பாலை நிலங்கள் வழியாகத்தான் அதிகளவில் வர்த்தக பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு விற்பனை பொருட்களை ஒட்டகங்களில் ஏற்றிச் சென்ற வணிகர்கள், பெட்ரா நகரில் ஓய்வெடுத்த பின்னர், தங்கள் பயணத்தை தொடர்ந்துள்ளனர். பெட்ரா நகரை கடந்து செல்லும் வணிகர்கள் அனைவரும் 25 சதவீதம் வரை சுங்க வரி செலுத்த வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருந்துள்ளது. இதன் காரணமாக அந்நரகம் செல்வ செழிப்பு மிக்கதாக இருந்துள்ளது.

இந்த நகரின் முக்கியத்துவத்தை உணர்ந்த ரோமானியர்கள், இதனை கைப்பற்றி தங்கள் ஆட்சிக்குகீழ் கொண்டு வந்தனர். பின்னர், இஸ்லாமியர்களின் ஆட்சி காலத்தின்போது, ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கான பாதையாகப் பெட்ரா நகர் மாறியது. தற்போது இந்நகரம் வணிக பயணத்திற்கான பாதையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. 1985ல் உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பெட்ரா முக்கியமான சுற்றுலா தலமாக மாறியது. இந்நிலையில்தான், அதன் வர்த்தக பாதையை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், ஜோர்டானின் பெட்ரோ, இந்தியாவின் எல்லோரா இடையேயான இரட்டை நகர ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த 2 பகுதிகளுமே குடைவரை கட்டங்களுக்குப் பெயர் போனவை என்பதால், அவற்றின் தனித்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பெட்ரா நகரை மீண்டும் வர்த்தக பாதையாகப் பயன்படுத்து குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: PM Modiபிரதமர் மோடிIs the city of Petra becoming a trade route again?பெட்ரா நகரம்jordon
Share
Tweet
SendShare
Previous Post

வங்கதேச அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்திய ஒஸ்மான் ஹாதி கொலை : தேர்தலுக்கு முன் நேரடி அரசியல் லாபம் யாருக்கு?

Next Post

பொங்கலுக்கு மஞ்சள் வழங்கிடுக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Related News

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies