செனாப் பள்ளத்தாக்கில் பாதுகாப்பை பலப்படுத்த முனைப்பு : காஷ்மீர் மக்களுக்கு கொரில்லா பயிற்சியளிக்கும் ராணுவம் - சிறப்பு தொகுப்பு!
Apr 29, 2026, 07:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செனாப் பள்ளத்தாக்கில் பாதுகாப்பை பலப்படுத்த முனைப்பு : காஷ்மீர் மக்களுக்கு கொரில்லா பயிற்சியளிக்கும் ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 1, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு மன உறுதியை வழங்கும் வகையில் இந்திய ராணுவம் கொரில்லா போர்முறை பயிற்சிகளை வழங்கி வருகிறது. பெண்கள் உட்பட கிராம மக்களுக்கு இந்திய இராணுவம் எவ்வாறு பயிற்சி அளிக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்…

ஜம்மு காஷ்மீரில் செனாப் பள்ளத்தாக்கில் உள்ள கிராமங்கள், காடுகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளன. அங்கு பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்த நிலையில், பாதுகாப்புப் படையினர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தோடா மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கு நமது ராணுவம் கொரில்லா போர் முறையிலான அடிப்படை பயிற்சிகளையும் வழங்கி வருகிறது….

தோடா – சாம்பா எல்லையில் உள்ள 17 தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த 150 கிராம பாதுகாப்பு காவலர்கள், பெண் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பயிற்சியில் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். தானியங்கி ஆயுதங்களை கையாளுதல், அடிப்படை போர் பயிற்சிகள, தற்காப்பு, பதுங்குக் குழி கட்டுமானம், பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளுதல் போன்றவற்றில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

தோடா மாவட்டத்தில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷிங்கினி கிராமத்தில் இந்தப் பயிற்சியானது அளிக்கப்படுகிறது. தங்களது கிராமங்களை பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல் ஆளாக நிற்கும் துணிவை ஏற்படுத்துவதுமே இந்த பயிற்சியின் நோக்கம் என்று ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக, தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில், செனாப் பள்ளத்தாக்கின் உயர் பகுதிகளில், ராணுவம், காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்த முயற்சி நிறைவு செய்யும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் வழங்கப்பட்ட பயிற்சி VDG உறுப்பினர்களிடையே மன உறுதியை அதிகரித்துள்ளது. ஆயுத பயிற்சி பெறும் பொதுமக்கள், தங்களுக்கு வழங்கப்படும் பயிற்சி ஊக்கத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறுகின்றனர்.

அத்துடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நடவடிக்கைகளுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். 1990ம் ஆண்டுகளில் இங்கு அடிக்கடி நடந்த பயங்கரவாத தாக்குதல்களை நினைவுகூர்ந்த பொதுமக்கள், அதிக தானியங்கி ஆயுதங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

ஊதியம் பெறாத VDG உறுப்பினர்களுக்கு கௌரவ ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறிய பொதுமக்கள், கிராமங்களில் பதுங்கு குழிகள் கட்டுவது குடியிருப்பாளர்களிடையே பயத்தைக் குறைக்க உதவியுள்ளது என்றும் கூறுகின்றனர்.

பயங்கரவாத குழுக்களுக்கு உள்ளூர் ஆதரவு தளத்தை மறுத்து, பிராந்தியத்தில் நீடித்த அமைதியை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று கூறப்படும் நிலையில், இத்தகைய பயிற்சி எல்லை பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Terrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.jammu Kashmir terro attackOperation Sindooroccupied KashmirIndiaPahala attackpakistanstrengthen security in the Chenab Valley:lashkar e taibaguerrilla training to the people of KashmirPoK
ShareTweetSendShare
Previous Post

டிசம்பரில் புதிய உச்சத்தை எட்டிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை!

Next Post

சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரிய டெட் தேர்ச்சி பெறாதவர்களை பணிநியமனம் செய்யும் அரசாணை வெளியீடு!

Related News

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies