சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!
Apr 29, 2026, 08:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

Manikandan by Manikandan
Jan 6, 2026, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பெண் காவலரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த ஐந்து மாதங்களாக போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் நந்தினி (28). நேற்று பெண் காவலர் நந்தினி மயிலாப்பூர் ஆர் கே சாலை ஜம்புலிங்கம் தெரு சிக்னல் அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது, நான்கு பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் எதிர்திசையில் (one way) மது போதையில் வந்துள்ளனர்.

அப்போது பெண் காவலர் நான்கு பேரை மடக்கிப்பிடித்து ஏன் நான்கு பேர் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது ஒருவர் தனது கூட்டாளியுடன் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி பெண் காவலரின் கையை பிடித்து இழுத்து பின்புறமாக முறுக்கி பிரச்சனை செய்துள்ளார்.

அதன் பின்னர் பெண் காவலர் சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் நான்கு பேரில் இருவரை பிடிக்கவே உடனிருந்த கூட்டாளிகளான இருவர் இருசக்கர வாகனத்தின் மூலம் தப்பி சென்றுள்ளனர்.

பின்னர் பிடிபட்ட பெருமாள் மற்றும் பிரேம் குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்திய போது தப்பி ஓடியவர்கள் ஜீவா மற்றும் சீனிவாசன் என்பதும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் பெருமாள் மற்றும் பிரேம்குமார் கொடுத்த தகவலின் பெயரில் மயிலாப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து ஜீவா மற்றும் சீனிவாசன் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஜீவாவின் தம்பி ஆகாஷ் உடைய இருசக்கர வாகனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண் காவலர் மீது தாக்குதல் நடத்தியது, திருவல்லிக்கேணி முத்தையா தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (28), மயிலாப்பூர் சண்முகம் பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (28), ராயப்பேட்டையை சேர்ந்த ஜீவா (23) மற்றும் கருப்பன் என்கிற சீனிவாசன் (27) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் பெருமாள், பிரேம்குமார் மற்றும் ஜீவா மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணையை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: chennaipoliceChennaipolicerowdyTNPOLICEattck
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம் – “பெருமகிழ்ச்சியளிக்கிறது.. ” அண்ணாமலை அதிரடி

Next Post

திமுக எம்.பி கதிர் ஆனந்த் மீதான வழக்கு – பிப்.3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies