சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

Manikandan by Manikandan
Jan 6, 2026, 12:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பெண் காவலரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த ஐந்து மாதங்களாக போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் நந்தினி (28). நேற்று பெண் காவலர் நந்தினி மயிலாப்பூர் ஆர் கே சாலை ஜம்புலிங்கம் தெரு சிக்னல் அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது, நான்கு பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் எதிர்திசையில் (one way) மது போதையில் வந்துள்ளனர்.

அப்போது பெண் காவலர் நான்கு பேரை மடக்கிப்பிடித்து ஏன் நான்கு பேர் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது ஒருவர் தனது கூட்டாளியுடன் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி பெண் காவலரின் கையை பிடித்து இழுத்து பின்புறமாக முறுக்கி பிரச்சனை செய்துள்ளார்.

அதன் பின்னர் பெண் காவலர் சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் நான்கு பேரில் இருவரை பிடிக்கவே உடனிருந்த கூட்டாளிகளான இருவர் இருசக்கர வாகனத்தின் மூலம் தப்பி சென்றுள்ளனர்.

பின்னர் பிடிபட்ட பெருமாள் மற்றும் பிரேம் குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்திய போது தப்பி ஓடியவர்கள் ஜீவா மற்றும் சீனிவாசன் என்பதும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் பெருமாள் மற்றும் பிரேம்குமார் கொடுத்த தகவலின் பெயரில் மயிலாப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து ஜீவா மற்றும் சீனிவாசன் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஜீவாவின் தம்பி ஆகாஷ் உடைய இருசக்கர வாகனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண் காவலர் மீது தாக்குதல் நடத்தியது, திருவல்லிக்கேணி முத்தையா தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (28), மயிலாப்பூர் சண்முகம் பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (28), ராயப்பேட்டையை சேர்ந்த ஜீவா (23) மற்றும் கருப்பன் என்கிற சீனிவாசன் (27) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் பெருமாள், பிரேம்குமார் மற்றும் ஜீவா மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணையை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒன் வே வில் சென்ற ரவுடிகளை பிடித்த பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: chennaipoliceChennaipolicerowdyTNPOLICEattck
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம் – “பெருமகிழ்ச்சியளிக்கிறது.. ” அண்ணாமலை அதிரடி

Next Post

திமுக எம்.பி கதிர் ஆனந்த் மீதான வழக்கு – பிப்.3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies