குஜராத் சோமநாதர் கோயிலில் சுயமரியாதை திருவிழா - பிரதமர் மோடி சாமி தரிசனம்!
Jul 29, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் சோமநாதர் கோயிலில் சுயமரியாதை திருவிழா – பிரதமர் மோடி சாமி தரிசனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 11, 2026, 06:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் சோமநாதர் கோயிலில் நடைபெற்ற சுயமரியாதை திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பிரார்த்தனை செய்தார்.

குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோமநாதர் கோயில் வரலாற்று புகழ்பெற்றது. இந்த கோயில் மீது கி.பி. 1,026 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலின் ஆயிரமாவது ஆண்டை நினைவு கூறும் வகையில் சுயமரியாதை திருவிழா நடைபெற்று வருகிறது.

கஜினி முகமதுவால் பலமுறை கோயில் இடிக்கப்பட்டாலும் இந்துக்கள் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் கோயிலைக் கட்டியதால் சுயமரியாதை விழா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்காக கடந்த 8-ஆம் தேதி முதல் 72 மணிநேரம் தொடர்ச்சியாக ஓம்கார மந்திர உச்சாடனம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுயமரியாதை திருவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டின் நலன்வேண்டி சோமநாதரை மனமுருகி வழிபட்டார்…

தொடர்ந்து ஓம்கார மந்திர உச்சாடன நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மந்திரத்தை உச்சரித்து பிரார்த்தனை செய்தார்..

இதையடுத்து 3 ஆயிரம் ட்ரோன்களைக் கொண்டு பிரமாண்டமான ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. சோமநாதர் கோயிலின் வரலாறு, அதன் மீட்சி மற்றும் சிவனின் உருவங்கள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டன…

ட்ரோன் கண்காட்சி முடிந்த பிறகு பிரதமர் மோடி திரிசூலத்தை உயர்த்திப் பிடித்தார். அப்போது வண்ண மயமான வாணவேடிக்கைகள் வானை அலங்கரித்தன…

இதையடுத்து சோமநாதர் கோயில் அறக்கட்டளையின் தலைவரான பிரதமர் மோடியின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோயிலின் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை விளக்கும் நவீன அருங்காட்சியகப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் பிரதமர் ஆலோசித்தார்.

மேலும், வெளிநாட்டு மற்றும் பிற மாநிலப் பயணிகளுக்கு வசதியாக பல மொழிகளில் ஆடியோ வழிகாட்டிகள் மற்றும் டிஜிட்டல் திரைகளை அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Tags: Omkara mantragujaratSomnath Templeprime minister modigujarat Somnath TempleMahmud of Ghazni
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்த சொல்லுங்க…! – அமெரிக்காவிடம் கதறிய பாகிஸ்தான்.. வெளியான உண்மை!

Next Post

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு – மத்திய அரசின் முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies