குஜராத் சோமநாதர் கோயிலில் சுயமரியாதை திருவிழா - பிரதமர் மோடி சாமி தரிசனம்!
Apr 29, 2026, 01:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் சோமநாதர் கோயிலில் சுயமரியாதை திருவிழா – பிரதமர் மோடி சாமி தரிசனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 11, 2026, 06:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் சோமநாதர் கோயிலில் நடைபெற்ற சுயமரியாதை திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பிரார்த்தனை செய்தார்.

குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோமநாதர் கோயில் வரலாற்று புகழ்பெற்றது. இந்த கோயில் மீது கி.பி. 1,026 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலின் ஆயிரமாவது ஆண்டை நினைவு கூறும் வகையில் சுயமரியாதை திருவிழா நடைபெற்று வருகிறது.

கஜினி முகமதுவால் பலமுறை கோயில் இடிக்கப்பட்டாலும் இந்துக்கள் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் கோயிலைக் கட்டியதால் சுயமரியாதை விழா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்காக கடந்த 8-ஆம் தேதி முதல் 72 மணிநேரம் தொடர்ச்சியாக ஓம்கார மந்திர உச்சாடனம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுயமரியாதை திருவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டின் நலன்வேண்டி சோமநாதரை மனமுருகி வழிபட்டார்…

தொடர்ந்து ஓம்கார மந்திர உச்சாடன நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மந்திரத்தை உச்சரித்து பிரார்த்தனை செய்தார்..

இதையடுத்து 3 ஆயிரம் ட்ரோன்களைக் கொண்டு பிரமாண்டமான ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. சோமநாதர் கோயிலின் வரலாறு, அதன் மீட்சி மற்றும் சிவனின் உருவங்கள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டன…

ட்ரோன் கண்காட்சி முடிந்த பிறகு பிரதமர் மோடி திரிசூலத்தை உயர்த்திப் பிடித்தார். அப்போது வண்ண மயமான வாணவேடிக்கைகள் வானை அலங்கரித்தன…

இதையடுத்து சோமநாதர் கோயில் அறக்கட்டளையின் தலைவரான பிரதமர் மோடியின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோயிலின் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை விளக்கும் நவீன அருங்காட்சியகப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் பிரதமர் ஆலோசித்தார்.

மேலும், வெளிநாட்டு மற்றும் பிற மாநிலப் பயணிகளுக்கு வசதியாக பல மொழிகளில் ஆடியோ வழிகாட்டிகள் மற்றும் டிஜிட்டல் திரைகளை அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Tags: gujaratSomnath Templeprime minister modigujarat Somnath TempleMahmud of GhazniOmkara mantra
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்த சொல்லுங்க…! – அமெரிக்காவிடம் கதறிய பாகிஸ்தான்.. வெளியான உண்மை!

Next Post

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு – மத்திய அரசின் முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies