குஜராத் சோமநாதர் கோயிலில் சுயமரியாதை திருவிழா - பிரதமர் மோடி சாமி தரிசனம்!
Apr 17, 2026, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் சோமநாதர் கோயிலில் சுயமரியாதை திருவிழா – பிரதமர் மோடி சாமி தரிசனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 11, 2026, 06:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் சோமநாதர் கோயிலில் நடைபெற்ற சுயமரியாதை திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பிரார்த்தனை செய்தார்.

குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோமநாதர் கோயில் வரலாற்று புகழ்பெற்றது. இந்த கோயில் மீது கி.பி. 1,026 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலின் ஆயிரமாவது ஆண்டை நினைவு கூறும் வகையில் சுயமரியாதை திருவிழா நடைபெற்று வருகிறது.

கஜினி முகமதுவால் பலமுறை கோயில் இடிக்கப்பட்டாலும் இந்துக்கள் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் கோயிலைக் கட்டியதால் சுயமரியாதை விழா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்காக கடந்த 8-ஆம் தேதி முதல் 72 மணிநேரம் தொடர்ச்சியாக ஓம்கார மந்திர உச்சாடனம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுயமரியாதை திருவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டின் நலன்வேண்டி சோமநாதரை மனமுருகி வழிபட்டார்…

தொடர்ந்து ஓம்கார மந்திர உச்சாடன நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மந்திரத்தை உச்சரித்து பிரார்த்தனை செய்தார்..

இதையடுத்து 3 ஆயிரம் ட்ரோன்களைக் கொண்டு பிரமாண்டமான ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. சோமநாதர் கோயிலின் வரலாறு, அதன் மீட்சி மற்றும் சிவனின் உருவங்கள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டன…

ட்ரோன் கண்காட்சி முடிந்த பிறகு பிரதமர் மோடி திரிசூலத்தை உயர்த்திப் பிடித்தார். அப்போது வண்ண மயமான வாணவேடிக்கைகள் வானை அலங்கரித்தன…

இதையடுத்து சோமநாதர் கோயில் அறக்கட்டளையின் தலைவரான பிரதமர் மோடியின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோயிலின் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை விளக்கும் நவீன அருங்காட்சியகப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் பிரதமர் ஆலோசித்தார்.

மேலும், வெளிநாட்டு மற்றும் பிற மாநிலப் பயணிகளுக்கு வசதியாக பல மொழிகளில் ஆடியோ வழிகாட்டிகள் மற்றும் டிஜிட்டல் திரைகளை அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Tags: Omkara mantragujaratSomnath Templeprime minister modigujarat Somnath TempleMahmud of Ghazni
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்த சொல்லுங்க…! – அமெரிக்காவிடம் கதறிய பாகிஸ்தான்.. வெளியான உண்மை!

Next Post

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு – மத்திய அரசின் முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு!

Related News

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி; த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு

5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் -நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை – பத்மநாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் குற்றச்சாட்டு!

கரூரில் செந்தில் பாலாஜி நண்பருக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

இபிஎஸ் உடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சந்திப்பு – அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் – உற்சாக வரவேற்பு அளித்த வாக்காளர்கள்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினர் – மடக்கிப்பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர பிரச்சாரம்!

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies