ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்த சொல்லுங்க...! - அமெரிக்காவிடம் கதறிய பாகிஸ்தான்.. வெளியான உண்மை!
Sep 10, 2026, 12:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்த சொல்லுங்க…! – அமெரிக்காவிடம் கதறிய பாகிஸ்தான்.. வெளியான உண்மை!

Manikandan by Manikandan
Jan 10, 2026, 09:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தாங்க முடியாமல், அமெரிக்காவிடம் மண்டியிட்டுத் தஞ்சமடைந்த பாகிஸ்தான் தடுத்து நிறுத்தச் சொல்லி கெஞ்சிய ஆதாரங்கள் அம்பலமாகி உள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மற்றும் பயங்கர வாத பயிற்சி முகாம்கள் அனைத்தையும் இந்தியா தாக்கித் தரைமட்டமாக்கியது.

சுமார் 100க்கும் அதிகமாகப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு இந்தியாவின் முக்கிய நகரங்கள்மீது பாகிஸ்தான் ஏவிய அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து இந்தியா சுட்டு வீழ்த்தியது.

மேலும் பாகிஸ்தானின் நூர் உட்பட முக்கிய விமானப் படை தளங்களையும் இந்தியா தாக்கிச் சுக்கு நூறாக்கியது. இந்தியாவின் தாக்குதலைக் கண்டு அஞ்சி நடுங்கிய பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்துமாறு இந்தியாவிடம் கெஞ்சியது.

இந்தியாவும் தற்காலிகமாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்தி வைத்தது. இதற்கிடையே தான் இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் கூறினார். இதுவரை சுமார் 70 முறைக்கும் மேலாக இதே பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறார் அமெரிக்க அதிபர்.

இந்தச் சூழலில், அமெரிக்க வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஆவணங்கள், ஆப்ரேஷன் சிந்தூரின்போது அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அவசர உதவிக்காகக் கெஞ்சியதை அம்பலப் படுத்தியுள்ளன. இதற்குக் கைம்மாறாக அமெரிக்காவுக்கு அதிக முதலீடுகள் மற்றும் நாட்டில் உள்ள முக்கிய கனிம வளங்களை வழங்கவும் பாகிஸ்தான் முன்வந்ததாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள்மூலம் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளை 50-க்கும் மேற்பட்ட முறை தொடர்பு கொண்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதற்காகச் சுமார் 5 மில்லியன் டாலர் செலவில் 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, பென்டகன் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க எம்பிக்களுடன் 50க்கும் மேற்பட்ட சந்திப்புகளைப் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.

அமெரிக்க அரசு அதிகாரிகள், மற்றும் லாபியிஸ்ட்கள் சந்திப்புகள் மட்டுமின்றி அமெரிக்காவின் முன்னணி ஊடகங்களில் நேர்காணல்கள் மற்றும் செய்தி கட்டுரைகள் வெளியிடவும் பாகிஸ்தான் தீவிர முயற்சி செய்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் PR செலவுகளைவிட மூன்று மடங்கு அதிகம் செலவு செய்து, அதிபர் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் பீல்டு மார்ஷல் அசிம் முனீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது

பாகிஸ்தான் அரசு. வலுவான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பில் அமெரிக்காவும் இடம்பெற வேண்டும் என்றும், இந்தியா- பாகிஸ்தான் இடையே மூன்றாவது நாடாக அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமாக ஒப்பந்தம் ஏற்பட முடியும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியதாக வெளியான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தாலிபான்களிடமிருந்தும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கெஞ்சியதாக ஆவணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக, 13 அமெரிக்க வீரர்களைக் கொன்ற (Abbey Gate) அபே கேட் என்ற ஐஎஸ்ஐஎஸ் பயங்கர வாதியைக் கைது செய்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தியதன் மூலம், தனது நிலை பாட்டையும் பாகிஸ்தான் நிரூபித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் தாக்குதலை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்’ என்று பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கதறியது தற்போது தெரியவந்துள்ளது. ஆனாலும், இந்தியா- பாகிஸ்தான் இடையே எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதம், இந்தியா -பாகிஸ்தான் போரின் போது, அதிபர் ட்ரம்ப் சமரசம் பேசவில்லை என்று பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் டார் தெரிவித்திருந்தார்.

மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்தியா மூன்றாம் நாட்டு தலையீட்டை விரும்பவில்லை என்று தம்மிடம் கூறியதாக இஷாக் டார் உறுதிப்படுத்தியிருந்தார்.

இதன் மூலம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கெஞ்சவில்லை; பாகிஸ்தான் தான் அமெரிக்காவிடம் கெஞ்சியது என்பது உறுதியாகியுள்ளது.

Tags: TrumpOperation SindoorProudIndianIndiaStrikesBackIndianArmyOperationSindoorSuccessPM ModiOperationSindoor winpakistanbjpusDonald Trump
Share
Tweet
SendShare
Previous Post

ட்ரம்பை உதாசீனப்படுத்தினாரா மோடி? – அமெரிக்க அமைச்சரின் பொய் தகவலுக்கு மறுப்பு

Next Post

குஜராத் சோமநாதர் கோயிலில் சுயமரியாதை திருவிழா – பிரதமர் மோடி சாமி தரிசனம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies