யூடியூபர் சவுக்கு சங்கரின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரும் வழக்கு : 23-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கிறது உயர் நீதிமன்றம்!
Sep 12, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யூடியூபர் சவுக்கு சங்கரின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரும் வழக்கு : 23-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கிறது உயர் நீதிமன்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 21, 2026, 06:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில் வரும் 23 ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்ட யூடியூப் சவுக்கு சங்கருக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவிட்டிருந்தது.

இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில், சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, செல்போன் கால், வாட்ஸ்அப் கால்மூலம் விசாரணை அதிகாரிகளை மிரட்டுகிறார். சாட்சிகளையும் மிரட்டுகிறார். விசாரணை அதிகாரியை கொலைகாரன் என்று திட்டி இருப்பதாக தெரிவிக்கப்ப்ட்டது.

மருத்துவ சிகிச்சை என்று சொல்லி இடைக்கால ஜாமீன் பெற்ற நிலையில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறி சவுக்கு சங்கர் தொடர்ந்து யூடியூப் வீடியோ போட்டு வருகிறார் அவதூறுகளை பரப்பி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சவுக்கு சங்கர் தரப்பில், இந்த வழக்கில் நீதிபதிகள் பாரபட்சமாக உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தனக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழக்கில் சட்டப்படி தான் முடிவெடுப்போம், நீதிமன்றத்தை ப்ளாக் மெயில் செய்து பணிய வைக்க முடியாது என சவுக்கு சங்கரை எச்சரித்தனர்.

இதுமட்டுமல்லாமல் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக கண்டபடி மரியாதையில்லாமல் காவல்துறை விசாரணை அதிகாரியை பேசலாமா? எனவும் சவுக்கு சங்கருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

காவல்துறை அதிகாரிகளை மரியாதை இல்லாமல் பேசக் கூடாது என சவுக்கு சங்கரின் தாயார் தான் அவருக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் வரும் ஜனவரி 23 ம் தேதி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிவித்து வழக்கினை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Tags: Jothiraman.madras high courtyoutuber savukku shankarinterim bail granted to YouTuber Savukku Shankar.Justices Velmurugan
Share
Tweet
SendShare
Previous Post

ஜன நாயகன் திரைப்பட வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Next Post

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினுக்கு அண்ணாமலை வாழ்த்து – அடிமட்ட தொண்டராக இருந்து வரலாற்று சிறப்புமிக்க பதவிக்கு உயர்ந்துள்ளதாக புகழாரம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies