ஆட்சி மாற்றம் வந்த பிறகு அரசியலுக்கு எதற்கு வந்தோம் என்று செந்தில் பாலாஜி வருத்தப்படுவார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து வெங்கமேடு பகுதியில் அண்ணாமலை தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கரூரை சேர்ந்த 18 சுயேச்சை வேட்பாளர்களை கோவையில் களம் இறக்கி விட்டுள்ளதாகவும், தேர்தலில் பூத்தில் கலாட்டா செய்வதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
செந்தில் பாலாஜி இந்த முறை கரூரில் நின்றிருந்தால் வரலாறு காணாத தோல்வி அடைந்திருப்பார் என விமர்சித்த அண்ணாமலை, புழல் சிறையில் அவருக்கு தனி அறை தயாராக உள்ளது என்றும், ஆட்சி மாற்றம் வந்த பிறகு அரசியலுக்கு எதற்கு வந்தோம் என செந்தில் பாலாஜி வருத்தப்படுவார் எனவும் தெரிவித்தார்.
















