தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாக ஒரு குடும்பமாக இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தமாகா வேட்பாளர் நிவின் சைமன் கேட்டுக்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தமாகா வேட்பாளர் டாக்டர் நிவின் சைமன் போட்டியிடும் நிலையில், கிள்ளியூரில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்து.
இந்த கூட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தமாகா வேட்பாளர் நிவின் சைமன், இந்த கூட்டத்தில் அனைத்து மதம் மற்றும் சாதியை சேர்ந்தவர்கள் ஒன்றாக கூடியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.
இங்கு இருக்கும் அரவணைப்பு ஒரு மாற்றத்திற்கான அடையாளம் என்றும், அன்பு மற்றும் சகோதரத்துவத்தை வாக்காளர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், நமது கூட்டணியை மதவாத சக்தி எனக்கூறுபவர்களை களத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என தமாகா வேட்பாளர் கேட்டுக்கொண்டார்.
















