திருச்செந்தூரில் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட அடைக்கலாபுரம் பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளரான மைக்கேல் ராஜேஷின் குடும்பத்தினர் 40 ஆண்டுகளாக அக்கட்சியில் பொறுப்பு வகித்து வந்தனர்.
இந்நிலையில், மைக்கேல் ராஜேஸ் தலைமையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி NDA வேட்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜான்சி ராணி என்பவர், திமுக தொடங்கிய காலம் முதலே உறுப்பினராக இருந்து வந்த தங்களின் குடும்பத்தினரை அனிதா ராதாகிருஷ்ணன் உதாசீனப்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
















