திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா போதை இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கஞ்சா போதை இளைஞர்கள் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கொலைவெறித் தாக்குதல் நடத்தியது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடலா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரே ஒரு வார்த்தை பேசினாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டை ஒரு Dummy முதல்வர் ஆண்டது போதும். தமிழகம் வாழ வேண்டுமென்றால் திமுக வீழ்ந்தே ஆக வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துளளார்.
















