ஆன்மீக வழிகாட்டுதலை தாண்டி சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக கர்நாடகாவிற்கு வருகை புரிந்தார். அப்போது, பெங்களூரு விமான நிலையத்தில் அவரை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேரில் வரவேற்றார்.
அதனைத்தொடர்ந்து, மாண்டியாவில் ஆதிச்சுஞ்சனகிரி மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குரு பைரவைக்ய மந்திரத்தை’ பிரதமர் மோடி திறந்து வைத்து சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது சமுதாயத்தில் அவ்வப்போது தோன்றும் சிறந்த ஆளுமைகள் ஆன்மீக வழிகாட்டுதலோடு நின்றுவிடாமல், மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டவர்கள் என்று புகழாரம் சூட்டினார். மக்களின் போராட்டங்களை உணர்ந்து, துயரங்கள் மற்றும் கஷ்டங்களிலிருந்து சமுதாயத்தை வெளியே கொண்டு வருவதற்கான வழியை காட்டியவர்கள் மகான்கள் என குறிப்பிட்டார்.
















