மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இது தொடர்பான சட்ட திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
30 மாதங்களுக்கு பிறகு 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி முதல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வந்ததாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
2023-ல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மகளிருக்கான இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் அமலுக்கு வந்தாலும், தற்போதைய மக்களவையில் இது நடைமுறைக்கு வராது என்றும், அடுத்ததாக மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னரே இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2034ஆம் ஆண்டில்தான் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















