விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், சாலையோர உணவகத்தில் பூரி சுட்டுக்கொடுத்து பா.ஜ.க வேட்பாளரும், மாநிலத்தலைவருமான நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரித்தார்.
சாத்தூர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு நயினார் நாகேந்திரன் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினருடன் நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்து, தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
தொடர்ந்து, சாலை ஓரத்தில் உள்ள உணவகத்திற்கு சென்ற நயினார் நாகேந்திரன், அங்கு பூரி சுட்டுக்கொடுத்தும், தேநீர் கடைக்கு சென்று தேநீர் அருந்தியவாறும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளுடன் உரையாடிய நயினார் நாகேந்திரன், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, பெற்றோரை தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கக் கூறுமாறு கேட்டுக்கொண்டார்.
















