திமுக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்கள் விரக்தியின் உச்சத்திற்கு சென்று கூலிப்படைகளாக போதைக்கு அடிமையாகி உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமாரை ஆதரித்து பேசிய அவர், மாணவர்களை குறி வைத்து போதை வியாபாரம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
ஸ்காட்லாந்துக்கு இணையான தமிழக காவல்துறை திமுகவினரிடம் கைகட்டி நிற்கும் நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மூன்றே மாதத்தில் தமிழகத்தை கஞ்சா இல்லாத மாநிலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மின் கட்டணம் உயர்வால் தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினர்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என்றும், மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவதை டெல்லி தடுத்துவிட்டதாக திமுக பொய் சொல்வதாகவும் தினகரன் குறிப்பிட்டார்.
















