சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் என்டிஏ கூட்டணியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மக்களவையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைத் தோற்கடித்ததற்காக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
இந்த இடஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கை நாட்டின் மிக முற்போக்கான முடிவுகளில் ஒன்று என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ், திமுக மற்றும் சில கட்சிகள் சீர்திருத்தங்களுக்கு எப்போதும் எதிர்ப்பாகவே இருந்து வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், தமிழ்நாட்டு மக்கள் இந்த கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழில் பிரச்சாரம் செய்தார்.
















