திருவண்ணாமலையில் 15 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கடந்த 19ம் தேதி 15 வயது சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் காட்டுப்பகுதிக்குள் இழுத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் பாதிப்படைந்த சிறுமி தனது வீட்டிற்கு செல்லாமலும், சம்பவம் தொடர்பாக யாரிடமும் கூறாமலும் இருந்து வந்துள்ளார்.
பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிறுமியை சோதனை செய்த மருத்துவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு வசிக்கும் மாவட்டமான திருவண்ணாமலையில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
















