அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தரப்படும் என பாஜக வேட்பாளர் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதியளித்துள்ளார்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பணிபுரியும் அகில இந்திய யாத்திரைப் பணியாளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமேஸ்வரம் பகுதிக்கு எந்த ஒரு திட்டங்களையும் திமுக எம்எல்ஏ செய்து தரவில்லை என குற்றம்சாட்டினார்.
கோயிலில் பணியாற்றும் யாத்திரை பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்து தரப்படும் என்றும், அரசின் சலுகைகள் அனைத்தும் பெற்று தரப்படும் எனவும் உறுதியளித்தார்.
மேலும், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பொதுமக்கள் நிறைய துன்பங்களை அனுபவித்து விட்டதாக கூறினார்
















